Skip to main content

சென்னை விமானநிலைய மேம்பாலத்தில் கார் தீ விபத்து!!

Published on 14/12/2018 | Edited on 14/12/2018

 

car

 

சென்னை விமான நிலையத்திற்கு எதிரே உள்ள மேம்பாலத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

இந்த தீ விபத்து காரணமாக  ஜிஎஸ்டி சாலை மற்றும் விமான நிலையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்திற்கு எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்தது. அதனை அடுத்து காரின் உரிமையாளர் இறங்கி வெளியே வந்துள்ளார். திடீரென ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த காரில் எத்தனை பேர் பயணித்தார்கள் போன்ற விவரங்கள் தெரிய வரவில்லை. கிண்டி மற்றும் தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து கொண்டிருக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்