Skip to main content

திருமணம் முடிந்ததும் பேருந்து நிலையத்திற்கு சென்ற மணமக்கள்... ஆச்சரியத்தில் ஆழ்ந்த அக்கம்பக்கத்தினர்!!

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

The bride and groom who went to the bus station after the wedding

 

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது அனைத்து தரப்பு பெண்களிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மணப்பெண் ஒருவர் திருமணம் கோலத்தில் இலவசமாக அரசு பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்றது ஆச்சா்யத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் மாமூட்டுகடையை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிவராமுக்கும், மார்த்தாண்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை அபிராமிக்கும் பெற்றோர்கள் நிச்சயித்தபடி திருமணம் நேற்று (13-ம் தேதி) மார்த்தாண்டத்தில் ஒரு திருமணம் மண்டபத்தில் நடந்தது.

 

திருமணம் முடிந்ததும் மணமகன் வந்த வாகனத்தில் மணமகள் கணவர் (மணமகன்) வீட்டிற்கு செல்வது வழக்கம். வழக்கம் போல் மதியம் 3 மணிக்கும் திருமணம் மண்டபத்தில் இருந்து சிவராமும் அபிராமியும் வெளியே வந்தனர். அப்போது அவர்கள் செல்வதற்கு இன்னவோ ஏ.சி கார் தயாராக நின்று கொண்டியிருந்தது. ஆனால் திருமணம் மண்டபத்தில் இருந்து வெளியே வந்த அந்த மணமக்கள் நேரா பஸ் நிறுத்தத்துக்கு சென்று அங்கு பஸ் ஏற நிற்கும் பயணிகளுடன் மணக்கோலத்தில் நின்றனர். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

 

The bride and groom who went to the bus station after the wedding

 

இந்த நிலையில் அங்கு வந்த மாமூட்டுக்கடை வழியாக கருங்கல் செல்லும் அரசு பேருந்தில் மணமக்கள் ஏறி இருக்கையில் உட்கார்ந்தனா். இதை பஸ் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். பின்னர் நடத்துநரிடம் மணமகளுக்கு இலவச டிக்கெட்டையும் மணமகன் கட்டணம் கொடுத்து டிக்கெட்டையும் வாங்கி பேருந்தில் பயணம் செய்தனர். பின்னர் மாமூட்டுக்கடை வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கிய மணமக்களை பின் தொடா்ந்து வந்த காரில் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

 

இந்த நிலையில் திடீரென்று மணமக்கள் ஏ.சி இன்னவோ காரை தவிா்த்து அரசு பேருந்தில் பயணம் செய்ய காரணம் தான் என்ன என்று கேட்ட போது மணமகளான அபிராமி கூறும் போது, “மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதும் அறிவித்த பல்வேறு திட்டங்களில் முக்கியமானது பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம்.

 

dsfgsdg

 

இது கடைக்கோடியில் இருக்கும் ஏழை பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக தான் நான் கருதுகிறேன். இதனால் தான் பெண்கள் மத்தியில் இலவச பேருந்து பயணத்தையும் மேலும் அதில் தேவைக்கு பயணம் செய்வதையும் விழிப்புணா்வு ஏற்படுத்த தான் மணக்கோலத்தில் அரசு இலவச பேருந்தில் பயணம் செய்தேன்” என்றார். மணக்கோலத்தில் மணப்பெண் அரசு பேருந்தில் புகுந்த வீட்டிற்கு சென்றது பண்டைய காலத்தை ஞாபகம் படுத்தும் விதமாக இருக்கிறது என்கின்றனர் குமாி மக்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.