Skip to main content

BHEL நிர்வாகத்திற்கு தலைவலி கொடுக்கும் 700 தொழிலாளர்கள் தொடர் விடுப்பு போராட்டம் ! 

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

 

bh

 

திருச்சியில் மிகமுக்கியமான தொழிற்சாலை BHEL.  இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். மிகவும் லாபகரமான தொழிற்சாலையாக இருந்து வருகிறது. அதில், தற்போது ஒரே நேரத்தில் 700 தொழிலாளர்கள் விடுப்பு போராட்டம் ஆரம்பித்திருப்பது தொழிற்சாலைக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 

 

BHEL தொழிற்சாலையில் மிக முக்கியமான பிரிவு வெல்டர் பிரிவு. இதில் 900க்கும் அதிமான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். வழக்கமாக உள்ள மற்ற பிரிவில் உள்ளவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு கொடுக்கப்படும். ஆனால் வெல்டிங்கில் உள்ளவர்களுக்கு மட்டும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு கொடுப்பது வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது. 

 

ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பதவி உயர்வு என்பதே இல்லை என்கிற நிலையை பெல் நிர்வாகம் கொண்டு வந்தது. உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை தொழிலாளர்கள் மத்தியில் கடந்த சில மாதங்களாக இருந்து வந்தது. 

 

நிர்வாகத்தை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதுவும் இழுபறியில் போக வழக்கை வாபஸ் பெற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்கு இடையில் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டாம் என கைவிட்டனர். 

 

இதன் பின்னர் மாஸ் விடுப்பு எடுப்பது என முடிவெடுத்து நேற்றிலிருந்து 6ந்தேதி வரை 700 பேருக்கு மேல் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்து போராட்டத்தை துவங்கினர். ஒரே நேரத்தில் 700 வெல்டிங் தொழிலாளர்கள் விடுப்பு போராட்டம் எடுத்தது பெல் நிர்வாகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

700 தொழிலாளர்களுக்கு இந்த விடுப்பு சம்பளம் கிடைக்காதாம். வெல்டர்கள் வேலைக்கு செல்லாததால் பெல் தொழிற்சாலை வேலை எதுவும் நடக்காமல் இருக்கிறதாம். இந்த ஆண்டு கணக்கு தற்போது வரை 30 சதவீத பணியே நிறைவடைந்து உள்ளதாம். இந்த ஆண்டு கணக்கு முடிய இன்னும் 5 மாதங்களே இருப்பதால் பணிகள் எல்லாம் அப்படியே பாதியில் நிற்கிறது. பெல் தொழிற்சாலையில் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் வெல்டர்களின் இந்த போராட்டத்தால் அதிகாரிகள் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் மிகுந்த யோசனையில் இருக்கிறார்கள். 

 

சம்பளம் போனாலும் பரவாயில்லை ஒரு தீர்வு கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார்கள் வெல்டிங் தொழிலாளர்கள். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

திருச்சியில் திடீர் என முளைத்த புத்த சிலை - அகற்றிய பெல் தொழிற்சாலை நிர்வாகம் !

Published on 04/01/2019 | Edited on 04/01/2019
b

 

திருச்சி பெல் வளாகத்தில் புத்தர் சிலை திடீரென வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற கோயில்கள் வளாகத்தில் இருப்பது போல் சிலை வைத்த இடத்தில் புத்தர் கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும் என புத்த மதத்திற்கு மாறிய தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். இவர்களுடன் .முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

 

பெல் வளாகத்தில் சக்தி கோயில் அருகே திடீர் என கடந்த சில நாட்களுக்கு முன்பு காலை மூன்றரை அடி உயர கல்லாலான புத்தரின் சிலை திடீரென வைக்கப்பட்டது. இதனை பெல் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் வைத்தனர்.

 

bh

 

இந்த சங்கத்தின் ஊழியர்களில் 50 பேர் புத்த மதத்திற்கு மாறியவர்கள். பெல் வளாகத்தில் மற்ற வழிபாட்டு தலங்கள் உள்ளது போல் புத்தருக்கு கோயில் கட்ட இடம் ஒதுக்குமாறு பெல் நிறுவனத்திடம் அனுமதி கேட்டனர்.

 

அனுமதி கொடுக்க மறுத்ததால் மகாபோதி புத்த சங்கம் ஆதரவுடன் புத்தர் சிலையை வைத்து விட்டனர். இதையறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

புத்தர் சிலையை வைத்த தொழிலாளர்கள் தரப்பினர் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்ட புத்தர் சிலை வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் சிலை அகற்றப்படலாம் என்ற தகவலால் தொழிலாளர்களும் விடிய விடிய காத்திருந்ததால் பெல் வளாகத்தில் பரபரப்பு நிலவியது. 

 

இதற்கிடையே பெல் வளாகத்திற்குள் எந்த கோயில்களும் கட்ட நிர்வாகம் எந்த அனுமதியும் இதுவரை வழங்கியதில்லை. தற்போது வளாகத்திற்குள் உள்ள சில கோயில்கள் பெல் வருவதற்கு முன்பே இருந்தவை. மற்ற கோயில்கள் வளாகத்தை ஒட்டிய உள்ளாட்சி எல்கைகளில் அமைந்துள்ளன என பெல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 

இந்த நிலையில் தீடீர் என இன்று பெல் நிர்வாகம் அனுமதியின்றி வைக்கப்பட்டது என்று பெல் பாதுகாவலர்களை வைத்து புத்தர் சிலையை அகற்றினர். இதனால் புத்தசிலை வைத்த பெல் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

Next Story

அண்ணனின் பெல் தொழிற்சாலை பதவி உயர்வுக்காக தேர்வு எழுதிய தம்பி கைது ! 

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

 

bh


திருச்சி பெல் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் மற்றும் பொதுப்பணிதுறை நிறுவனங்களில் வேலை செய்வோர் உள்ளிட்டோர் தங்களின் பணி உயர்வுக்காக ஏ.ஐ.எம்.இ. என்கிற பயிற்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்கிற விதி உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சியானால் மட்டுமே பணி உயர்வு கிடைக்கும். 

 

இந்த தேர்வு திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் என்.ஐ.டி யில் நடைபெற்றது. அப்போது தேர்வு அறையை கண்காணித்த அதிகாரி ஒருவர் தேர்வு எழுதிய ஒருவர் மீது சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரித்தார். அவர் பெல் தொழிற்சாலையில் வேலை செய்யும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் விகாஷ்குமார் என்பவரின் தம்பி விஷால் குமார் என்பது தெரியவந்தது. 

 

இவர் தன் அண்ணனின் பதவி உயர்வுக்காக பீகாரில் இருந்து வந்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்பு தேர்வு அதிகாரிகள் அவரை துவாக்குடி போலிசார் வசம் ஒப்படைத்தனர். அவர்கள் கைது செய்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.