Skip to main content

இட்லி சாப்பிட சென்ற ஆட்டோ டிரைவர்... தனியாக நின்ற ஆட்டோ...விசாரணையில் வெளிவந்த உண்மை!

Published on 22/10/2019 | Edited on 23/10/2019

சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொரட்டூர் பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ் என்ற கிரைம் சுரேஷ். இவருக்கு வயது 30. சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. பின்னர் அப்பகுதியில் மனைவி, தாய், தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ஒரு சில சமூக விரோத செயல்களை செய்து வந்துள்ள சுரேஷ், தற்போது அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் கடந்த 14-ம் தேதி பாடி அருகே இருக்கும் சாலையோர கடையில் இட்லி சாப்பிடச் சென்றார். பின்பு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சுரேஷின் தாயார் கொரட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மீது கொரட்டூர் போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை என்று அம்பத்தூர் துணை ஆணையர் அலுவலகத்திலும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் கடந்த சில நாட்களாக தினமும் சென்று புகார் அளித்துள்ளார். 

 

incident



இந்த புகாரை அடுத்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் 6 நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை, பாடி அருகில் சுரேஷின் ஆட்டோ மட்டும் தனியாக நின்றுள்ளது. தனியாக நின்ற ஆட்டோ சுரேஷோட ஆட்டோ என்று அவரது நண்பர் சுரேஷின் தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்பு சுரேஷின் தாயார் மீண்டும் கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் எனது மகன் ஆட்டோ தனியாக இருக்கிறது. இது பற்றி விசாரியுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் பாடி கலைவாணர் நகரில் இட்லி கடை நடத்தி வரும் அம்மு என்ற கார்த்திகா மீது சந்தேகம் இருப்பதாகவும் சுரேஷின் தாயார் தெரிவித்துள்ளார். இதன் பின்பு அம்மு என்ற கார்த்திகாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் பிழைப்பு தேடி புதுக்கோட்டையிலிருந்து சென்னை வந்துள்ளார் கார்த்திகா. அப்போது சுரேஷ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தை அடுத்து கார்த்திகாவிற்கு சுரேஷ் இட்லி கடை வைத்து கொடுத்துள்ளார். இந்த கடைக்கு தினமும் இரவு சுரேஷ் சாப்பிட வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இருவருக்கும் இடையிலான இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதை தட்டிக் கேட்ட தனது தாய்மாமனையே கொலை செய்ததாக சுரேஷ் மீது தற்போது வரை  வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தப் பழக்கம் நீண்ட காலமாக தொடர்ந்த நிலையில், திடீரென சுரேஷிடம் பேசுவதை கார்த்திகா தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி இட்லி கடையில் சாப்பிடும் போது, அங்கு வந்த ஒருவரிடம் அம்மு சிரித்து சிரித்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கடையிலேயே அம்முவிடம் சண்டை போட்டுள்ளார். மேலும், கடையில் இருந்த கத்தியை எடுத்து அம்முவின் தொடையில் குத்தியும் மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அம்மு தனது கணவர் ஜெயகொடியிடம் நடந்ததை கூறியுள்ளார். அவர் தனது நண்பர்கள் ராஜா சுந்தரகாண்டம் ஆகியோருடன் சேர்ந்து சுரேஷை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். 


பின்னர் 14-ம் தேதி இரவே சுரேஷை வீட்டுக்கு வரவைத்த அம்மு,  மயக்க மருந்து கலந்த இட்லியை கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சுரேஷ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதை அடுத்து அவரை வீட்டிலேயே அடித்து 4 பேரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். உடலை அருகில் இருந்த முட்புதரில் வீசிவிட்டு, தலையை செங்குன்றம் அருகே உள்ள கால்வாயிலும் வீசியுள்ளனர்.  இந்த தகவல் அறிந்த போலீஸார், கார்த்திகா, அவரது கணவர் ஜெயக்கொடி, ராஜா, சுந்தரகாண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உடலை எடுத்துச் சென்ற ஆட்டோ மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இதனிடையே செங்குன்றம் போலீசார் வடபெரும்பாக்கம் அருகே வீசப்பட்ட  சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுரேஷின் தலையை கொளத்தூர் மற்றும் செங்குன்றம் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.