Skip to main content

கரோனா நிவாரண அரசு நிதியை அ.தி.மு.க. வார்டு செயலாளர் மக்களுக்கு வினியோகம்

Published on 05/04/2020 | Edited on 05/04/2020

சாவு வீட்டிலும் கூட அரசியல் நடத்த தயங்க மாட்டார்கள் அரசியல்வாதிகள் என்பது இந்த சம்பவம் ஒன்றே சாட்சி என்கிறார்கள் மக்கள். கரோனா வைரஸ்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இந்திய மக்களுக்கு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போட்டுவிட்டது மத்திய அரசு.தமிழ்நாட்டிலும் இது தொடர்கிறது.

 

AIADMK to donate Corona Relief Government Fund Distribution of ward secretary to the people


வறுமையினால் வாடுபவர்கள், ஏழைகள், தொழிலாளர்கள், அன்றாடம் கிடைக்கும் வேலைக்கு உழைத்து அன்றைய தினத்தின் பசியை போக்கும் அப்பாவி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க வைத்துவிட்டால் அவர்கள் உணவுக்கு எங்கே போவார்கள்? அவர்களுக்கு நிவாணம் கொடுப்பது அரசின் கடமை அதை உடனே செய்ய வேண்டும் என தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான தி.மு.க. தொடங்கி கம்யூனிஸ்ட் கட்சிகள் என மக்கள் நலன் சார்ந்த இயக்கங்கள் அரசுக்கு கோரிக்கையும் வேண்டுகோளாகவும் குரலை உயர்த்தி கேட்டது. அதன் பலனாக இங்குள்ள மாநில எடப்பாடி அரசு ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்குவதோடு வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ரேசன் கடையில் அரிசி பெறும் கார்டு வைத்துள்ள அணைவருக்கும் கரோனா நிவாரண உதவியாக ரூபாய் ஆயிரம் ரொக்கமாக கொடுப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

ரேசன் பொருட்கள் நேரடியாக கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் எனவும் பணம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேசன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள் என அரசு உத்தரவு வந்தது. இதில்தான் அரசியல் செய்கிறது ஆளும் அ.தி.மு.க. மக்களுக்கு நிவாரண நிதியாக அரசு கொடுக்கும் பணம் என்பது மக்களின் வரிப்பணம் இது ஏதோ அ.தி.மு.க.வினர் முன்பு ஒட்டு வாங்க ஒட்டுக்கு பணம் கொடுத்தது போல் களத்தில் இறங்கி கொடுக்க தொடங்கி விட்டனர். அப்படியொன்று தான் இந்த சம்பவம்,

 

AIADMK to donate Corona Relief Government Fund Distribution of ward secretary to the people


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள 23 வது வார்டு பகுதியில் நிவாரண தொகை ரூபாய் 1000 ரேஷன் கடை ஊழியர்கள் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று வழங்காமல் அந்த வார்டு அதிமுக செயலாளர் முகமது யூசுப் என்கிற முபாரக் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. நான்காம் தேதி காலை முதல் மாலை வரை முபாரக் தனது அலுவலகமாக  வைத்திருக்கும் அவரது ஜெராக்ஸ் கடையில் வைத்து அந்தப் பகுதி மக்களுக்கு நிவாரண பணம் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.  அந்த வார்டு பொதுமக்கள் ஆண் பெண் என எல்லோரையும் வரிசையில் நிற்க வைத்து அவரது கடையில் இருந்து 1000 ரூபாய் வினியோகிக்க தொடங்கினார்.

இதைக்கண்ட பொதுமக்களில் சிலர் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கூறினார்கள். அரசின் நிவாரண நிதி எப்படி ஆளுங்கட்சி அதிமுக வார்டு செயலாளர் கொடுக்கலாம் என கேள்வி எழுப்ப, அந்தப் பகுதிக்கு வந்த கோபி வருவாய் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் அதன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கட்சிக்காரர்களிடம்  நீங்கள் நேரிடையாக கொடுக்க வேண்டாம் ரேஷன் கடை ஊழியர்கள் கொடுக்கட்டும் நீங்கள் வேண்டுமானால் ரேசன் கடை பணியாளர்களோடு  சென்று பொதுமக்கள் யார், யார் என அடையாளம் காட்டுங்கள் என்று  மறைமுகமாக நீங்கள் தலைமையேற்று செல்லுங்கள் என அதிகாரிகள் கூறிவிட்டு சென்று விட்டனர். அதன்பிறகு அவரது கடையில் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஒவ்வொரு வீதியாக சென்று குறிப்பிட்ட ஒரு இடத்தில் நின்று கார்டுதாரர்கள் ஐந்து ஆறு பேரை வரவழைத்து ஊழியர்கள் முன்னிலையில் மீண்டும் பணம் கொடுத்தார். 

எந்தந்த நடவடிக்கைகளில் அரசியல் செய்வது என்பதெல்லாம் இல்லாமல் இந்த நிவாரண உதவியை கூட அதிமுக அரசியல் செய்தது அவலமாக தெரிகிறது. என பணம் பெற்ற மக்களே திட்டிக் கொண்டு சென்றனர். கோபிசெட்டிபாளையம் பகுதி அதிமுகவின் சீனியர் அமைச்சரான செங்கோட்டையின் ஊர். அவரது ஏற்பாட்டின் அடிப்படையிலேயே அதிகாரிகள் அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் மூலம் நிவாரண உதவியை கொடுத்துள்ளனர். கோபிசெட்டிபாளையம் மட்டுமல்ல ஈரோட்டிலும் ஏன் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் அதிமுக நிர்வாகிகள் நேரில் நின்று ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கிக் கிடக்கும், வேலை இழந்த அப்பாவி பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாயை ஏதோ இவர்கள் வீட்டு பணம் போல் கொடுத்து வருகிறார்கள் என்பது தான் பரிதாபம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.