Skip to main content

“தீட்சிதர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”- பத்திரிகையாளர்கள் மனு!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

"Action should be taken against Dixit" - Journalists petition

 

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பத்திரிகையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியை சந்தித்து மனு அளித்தனர்.

 

அந்த மனுவில், சிதம்பரம் நடராஜ கோவிலில் நடைபெறும் தேர்  மற்றும் தரிசன விழாவில் பத்திரிகையாளர்கள் தெற்கு வீதியில் உள்ள  சாரதராம் கட்டிடத்தின் மாடியில்  இருந்து தேரோட்டத்தை புகைப்படம் வீடியோ எடுக்கவும், தரிசன விழாவின் போது  கிழக்கு கோபுர வாயில் அருகில் உள்ள கிணற்றுப் பகுதியில் இருந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தேர் மற்றும் தரிசனம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  

 

அதனடிப்படையில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் குறிப்பிட்ட பகுதியில் போலீசார் பாதுகாப்புடன் தூரத்திலிருந்து சாமியை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை  வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் 20-ந்தேதி  நடைபெற்ற தரிசனவிழாவில் பத்திரிகையாளர்களுக்கான ஒதுக்கப்பட்ட கிணற்றடி பகுதியில் பத்திரிகையாளர்கள்  படம் மற்றும் வீடியோ எடுத்து கொண்டிருந்த போது  தீட்சிதர்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் உங்களை கோவிலைவிட்டு வெளியேற சொல்லியுள்ளார். புகைப்படம் வீடியோ எடுக்ககூடாது வெளியே செல்லுங்கள் என பக்தர்கள் மத்தியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டும் தொனியில் தகராறு செய்தனர்.

 

இதனைத் தொடர்ந்து தீட்சிதர் ஒருவர் 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடியிருக்கும் தரிசன விழாவில் ஒலி பெருக்கி மூலம் மாவட்ட ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி பத்திரிக்கையாளர்களை வெளியேற தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் கூறிக்கொண்டே இருந்தார். இந்த நாகரீகமற்ற செயலை கண்டித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட,  ஒலி பெருக்கிமூலம் செய்தியாளர்கள் குறித்து ஒருமையில் பேசிய தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனு கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்த புகார் தமிழக முதல்வர், இந்து அறநிலையத்துறை அமைச்சர், தமிழக காவல்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிதம்பரம் பத்திரிகையாளர்கள் முன்னேற்றம் சங்கம் சார்பில் அனுப்பப்பட்டு உள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.