Skip to main content

ஏசி இயந்திரம் தலை மேல் விழுந்து ஊழியர் உயிரிழப்பு; ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

AC machine falls on head, employee lose their live; Pandemonium at Rajiv Gandhi Government Hospital

 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து ஏசி இயந்திரம் கீழே விழுந்ததில் மருத்துவமனை ஊழியர் ஒருவர் காயமடைந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ஒப்பந்த ஊழியராக சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு (62 வயது) என்பவர் பணியாற்றி வந்தார். இன்று மதியம் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு திருநாவுக்கரசு கிளம்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது மருத்துவமனையின் இரண்டாவது தளத்திலிருந்து குளிர்சாதனப் பெட்டி கழன்று கீழே விழுந்துள்ளது.

 

நடந்து சென்று கொண்டிருந்த திருநாவுக்கரசர் தலையின் மீது குளிர்சாதனப் பெட்டி விழுந்ததால் திருநாவுக்கரசு பலத்த காயமடைந்தார். காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இறுதியில் சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்