Skip to main content

திருச்சியில் அடுத்தடுத்த சம்பவங்கள்; கல்லூரி மாணவி, கர்ப்பிணி உட்பட 6 பேர் மாயம்!

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

6 people have gone missing consecutively in Trichy

 

திருச்சி பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த மகாமுனி என்பவரது மகள் நந்தினி (வயது 18). இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.  நேற்று முன்தினம் நந்தினி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், நந்தினி அவரது தாயார் மாலதிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, பிராட்டியூர் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற வாலிபரை தான் திருமணம் செய்ததாகவும், இனிமேல் தன்னைத் தேடவேண்டாம் என்றும் கூறியுள்ளார். இருப்பினும், மாலதி  போலீசில் புகார் செய்ததன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

திருச்சி கே.கே நகர் பகுதியில் 18 வயது இளம்பெண் ஒருவர் மாயமானார். திருச்சி பர்மா காலனி கவிபாரதி நகர் பகுதியைச் சேர்ந்த காட்டுராஜா என்பவரது மகள் தமிழ்ச்செல்வி(18). இவர் காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். காங்கேயத்தில் தங்கி இருந்த அவர் கடந்த 28 ஆம் தேதி திருச்சிக்கு செல்வதாக தனது சகோதரியிடம் கூறிச் சென்றார். ஆனால், திருச்சிக்கு அவர் வந்தடையவில்லை. இது குறித்து தாயார் புஷ்பம் கே.கே நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

திருச்சி ஸ்ரீரங்கத்தில் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில் ஒரு இளம்பெண் மாயமானார். ஸ்ரீரங்கம் திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் அபிநயா. இவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்த நிலையில் வீட்டிலிருந்து அபிநயா திடீரென மாயமானார். இது குறித்து அவரது தாயார் வைஜெயந்தி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அபிநயாவை தேடி வருகின்றனர்.

 

திருச்சி தில்லை நகரில் ஒரு சிறுமி மாயமானார். திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி மளிகை கடைக்கு சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெரு எழில் நகர் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மனைவி பானு என்கிற சமீம் பானு மாயமாகியுள்ளார். இவர் சமீப காலமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமாகி விட்டார்.

 

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் மாயமாகியுள்ளார். பாலக்கரை ஆழ்வார் தோப்பு முருகன் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா. அவரது மனைவி மகபூநிஷா. இந்த தம்பதிகளுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது நான்கு மாதக் கர்ப்பிணியாக இருக்கும் மகபூநிஷா அருகிலுள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திருச்சியில் இப்படி அடுத்தடுத்து காணாமல் போனவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும் நிலையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.