Skip to main content

பாஜக நிர்வாகி படுகொலை; வெளியான பகிர் வாக்குமூலம்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

6 people arrested in case passed away BJP executive

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். முன்விரோதத்தில் அவரை வெளிமாநிலங்களைச் சேர்ந்த கூலிப்படையினரை வைத்து தீர்த்துக் கட்டியிருக்கும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.  

 

திருப்பத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கலி கண்ணன் (45). இவருடைய மனைவி உஷா. இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். பழைய இரும்பு கடை வைத்திருந்தார். அத்துடன், குடிநீர் கேன் விநியோகத்திலும்,  வட்டித்தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 6 ஆண்டுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்த கலி கண்ணன், திருப்பத்தூர் நகர துணை செயலாளராக இருந்து வந்தார். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், குடும்பத்தைப் பிரிந்து திருப்பத்தூர் செட்டி தெருவில் உள்ள மேன்ஷனில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வேப்பாளம்பட்டியில் உள்ள ஒரு குவாரி அருகே, கலி கண்ணனின் சடலம் நவ. 24ம் தேதி காலையில் கைப்பற்றப்பட்டது. மர்ம நபர்கள் அவரை கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தை வீசிச் சென்றது தெரியவந்தது. கலி கண்ணனின் சடலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.

 

சில மாதங்களுக்கு முன்பு நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய சில கருத்துகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவருடைய அலைபேசிக்கு மர்ம நபர்களிடம் இருந்து மிரட்டலும் வந்தது. இது தொடர்பாக அவர் திருப்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இப்படியான நிலையில், கலி கண்ணன் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் மத ரீதியான விவகாரம் இருக்கலாம் என்றும் ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, திருப்பத்தூரில் வட்டித்தொழில் செய்து வரும் ஹரிவிக்னேஷ் (23) என்பவருக்கும், கலி கண்ணனுக்கும் கடந்த 2016ம் ஆண்டு சொத்து தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. அப்போதே ஹரி அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இது தொடர்பாக, அப்போது திருப்பத்தூர் காவல்நிலையத்தில் ஹரிவிக்னேஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹரிவிக்னேஷ் அண்மையில் நீதிமன்றத்தில் பிணை உத்தரவு பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். அந்த முன்விரோதம் காரணமாக பழிதீர்க்கும் நோக்கத்தில் கலி கண்ணன் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

 

பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவத்தால் மத ரீதியான மோதல்கள் உருவாகிவிடக் கூடாது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன்பும், அவருடைய சொந்த ஊரிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்ட காவல்துறையினரும் இந்த சம்பவம் குறித்து ஒரே நேரத்தில் தீவிர விசாரணையில் இறங்கினர்.

திருப்பத்தூரில் கலிகண்ணன் தங்கியிருந்த மேன்ஷன் அருகே பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். நவ. 23ம் இரவு 11 மணியளவில் மேன்ஷனை விட்டு கீழே இறங்கி வந்த கலி கண்ணனை, திருப்பத்தூர் ஹரிவிக்னேஷ் தலைமையில் வந்த ஒரு கும்பல், காரில் கடத்திக்கொண்டு ஊத்தங்கரை சாலையில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றது தெரியவந்தது.

 

அதையடுத்து திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் ஊத்தங்கரை விரைந்தனர். கொலையாளிகள் ஓசூரில் பதுங்கி இருந்த இடத்தைக் கண்டுபிடித்த திருப்பத்தூர் காவல்துறையினர், அவர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். ஹரி உள்பட 6 பேரை கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட குற்றவாளிகளை ஊத்தங்கரை காவல்நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கலி கண்ணனை, ஹரிதான் கூலிப்படையை ஏவி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கேரளா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த கூலிப்படையினரை இந்தக் கொலையில் ஈடுபடுத்தியுள்ளார்.

 

காவல்துறையினரிடம் ஹரிவிக்னேஷ் அளித்த வாக்குமூலம்:

கடந்த 2016ம் ஆண்டு, சொத்து தகராறு தொடர்பாக கலி கண்ணனை கத்தியால் வெட்டினேன். இதில் பலத்த காயம் அடைந்த அவர் என் மீது திருப்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த வழக்கில் என்னை காவல்துறையினர் கைது செய்தனர்.

சமீபத்தில்தான் இந்த வழக்கில் பிணை உத்தரவு பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தேன். இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்பதால், வழக்கை திரும்பப் பெறும்படி சொன்னேன். இருவரும் சமாதானமாக போய் விடலாம் என்றும் கலி கண்ணனிடம் கூறினேன்.

ஆனால், அவர் வழக்கை திரும்பப் பெற மறுத்துவிட்டார். பலமுறை கெஞ்சிக் கேட்ட பிறகும் அவர் மசியவில்லை. இதனால், என்னை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அவரை தீர்த்துக்கட்டிவிட எண்ணினேன்.  என் திட்டத்தை செயல்படுத்த உள்ளூரைச் சேர்ந்த ரவுடி மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த கூலிப்படை கும்பலையும் பயன்படுத்திக் கொண்டேன்.

 

கலி கண்ணனை காரில் கடத்திக்கொண்டு ஊத்தங்கரை அருகே சென்றபோது, வெற்று பத்திரத்தில் கையெழுத்துப் போடும்படி மிரட்டினேன். அப்போதும் அவர் ஒத்துக்கொள்ளாததால் வேறு வழியின்றி, ஓடும் காரிலேயே அவரை கழுத்தறுத்துக் கொலை செய்தோம். பின்னர், சடலத்தை ஊத்தங்கரையில் ஒரு குவாரி அருகே வீசிவிட்டுத் தப்பிச்சென்று விட்டோம். இவ்வாறு வாக்குமூலத்தில் ஹரி தெரிவித்துள்ளார்.

முக்கியக் குற்றவாளியான ஹரிவிக்னேஷ், கூலிப்படை ரவுடியான திருப்பத்தூர் அருகே உள்ள கருப்பனூரைச் சேர்ந்த அருண்குமார், கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த அருண், ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஆனந்தன், நவீன்குமார் ஆகிய 6 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் இன்னும் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. சடலம் கைப்பற்றப்பட்ட ஒரே நாளில் முக்கியக் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களைக் கைது செய்வதில் ஈடுபட்ட உள்ளூர் காவல்துறையினர், உளவுப்பிரிவு, குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ராஜேஷ் தாஸ் குற்றவாளி! சரணா? கைதா? - இறுதிக்கட்டத்தில் பாலியல் வழக்கு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police are serious to arrest the accused Rajesh Das

கடந்த அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். அவர், அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தை கவனித்துக் கொண்டார். அப்போதைய முதல்வருடன் டெல்டா மாவட்டத்துக்கு பாதுகாப்பு பணியை மேற்கொள்ள ராஜேஷ் தாஸ் உடன் சென்றிருந்தார். அப்போது, மரியாதை நிமித்தமாக டெல்டா மாவட்டத்தில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் ராஜேஷ் தாஸை சந்தித்துள்ளார். ஆனால், அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜேஷ் தாஸ் காரில் வைத்து பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைச் சற்றும் எதிர்பாராத அந்த பெண் எஸ்பி புகார் அளிக்க சென்னை சென்றார். அப்போது, வழியில் மறித்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் ராஜேஷ் தாஸுக்கு ஆதரவாக சமாதானம் பேசி பெண் எஸ்பியிடம் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார். இப்படி, பல மிரட்டலையும் மீறி பாலியல் தொல்லைக்கு ஆட்பட்ட பெண் எஸ்பி, அப்போதைய டிஜிபி திரிபாதியைச் சந்தித்து தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து துணிச்சலுடன் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியை தடுத்து புகார் அளிக்க இடையூறு செய்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் ராஜேஷ் தாஸுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால், ராஜேஷ் தாஸ் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறையினர் குடிமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், ராஜேஷ் தாஸ் காவல்துறையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், ராஜேஷ் தாஸ் சிறை செல்வது உறுதியானது. இதையடுத்து, வழக்கை விசாரணை செய்து வந்த சிபிசிஐடி போலீஸார் பாலியல் குற்றவாளி ராஜேஷ் தாஸை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தண்டனை தீர்ப்பு உறுதியான பிறகு ராஜேஷ் தாஸ் வடமாநிலங்களில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்டது. அவரை பிடிக்க போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவரைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தண்டனை உறுதியானதால் ராஜேஷ் தாஸ் எங்கு இருக்கிறார் என்று தனிப்படை போலீஸார் விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் சரண் அடையலாம் என்றும், அப்படி இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ராஜேஷ் தாஸ் வழக்கு குறித்து சட்ட நிபுணர்களுடனும், காவல்துறை உயரதிகாரிகளுடனும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்திருப்பதால் ராஜேஷ் தாஸ் தலைமறைவாக இருந்தாலும், கைது செய்யப்படுவார் என சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.