Skip to main content

திமுக வெளியில் தான் புலி, சட்டமன்றத்தில் எலி: செல்லூர் ராஜூ கிண்டல்!

Published on 23/07/2018 | Edited on 23/07/2018


திமுக வெளியில் தான் புலி, ஆனால் சட்டமன்றத்தில் எலி என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் செய்துள்ளார்.

கோவையில் கூட்டுறவு சங்கம் சார்பில் கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கட்டிடத்தை திறந்து வைத்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

திமுக வெளியில் தான் புலி, ஆனால் சட்டமன்றத்தில் எலி. அதுமட்டுமல்ல இன்று தமிழகத்தில் எந்த திட்டத்தையும் குறையாக சொல்ல முடியவில்லை. இப்படி திட்டங்கள் நிறைவேறும் போது, மக்கள் மனதில் அதிமுக நிறைந்து இருக்கிறோம்.

இந்த காழ்புணர்ச்சியால் எதிர்கட்சிகள் எங்களை குறைகூறி வருகிறது. என்னதான் டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும் இங்கே எப்படின்னு நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்