Skip to main content

11 ஆண்டுகளில் 5வது சிறப்பு சட்டமன்றக் கூட்டம்!

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

5th Special Assembly Meeting in 11 Years!

 

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று (08/02/2022) நடைபெறுகிறது. மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் காலை 10.00 மணிக்கு சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடக்க உள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சட்டமன்றக் கூட்டம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

 

கடந்த ஆண்டு செப்டம்பர் 13- ஆம் தேதி அன்று நீட் தேர்வில் விலக்கு கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 142 நாட்களுக்கு பின் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த பிப்ரவரி 1- ஆம் தேதி அன்று சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5- ஆம் தேதி அன்று சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடக்கிறது. 

 

11 ஆண்டுகளில் 5வது சிறப்பு சட்டமன்றக் கூட்டம்!

தமிழக சட்டமன்றத்தில் 11 ஆண்டுகளில் 5ஆவது முறையாக இன்று (08/02/2022) சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 2011- ஆம் ஆண்டு டிசம்பர் 15- ஆம் தேதி அன்று முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை நிலைநாட்ட தீர்மானம் நிறைவேறியது. இலங்கையில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதற்காக 2013- ஆம் ஆண்டு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கடந்த 2017- ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடையை நீக்கவும், 2018- ஆம் ஆண்டு மேகதாது அணை விவகாரத்துக்காக சிறப்பு கூட்டம் நடைபெற்றது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

''அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை'' - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
"We don't want to celebrate it as a festival" - Chief Minister's speech in the meeting

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத் தொடருக்கான கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் கலைஞர் நினைவிடம் திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவரது உரையில், ''நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞரின் நினைவகம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரின் நினைவிடம் மட்டுமல்லாது அவரை உருவாக்கிய நம் தாய் தமிழ்நாட்டின் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணாவின் நினைவகமும், கலைஞரின் நினைவகமும் புதுப்பிக்கப்பட்டு வருகிற பிப்.26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதற்காக நான் இதை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன் என்று சொன்னால், இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எல்லாம் அடிக்கவில்லை.அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. ஆகவே இதை நிகழ்ச்சியாகவே நடத்த விரும்புகிறோம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லா கட்சிகளுடைய உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மூலமாக அழைப்பு விடுத்து இதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.