Skip to main content

விபத்தில் காலை இழந்த அரசுப் பள்ளி மாணவி நீட் தேர்வில் 3 -ஆம் இடம்! தன்னம்பிக்கை வென்றது!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

Kanyakumari

 

மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வில், அரசுப் பள்ளி மாணவா்கள் பலர் சாதித்துள்ளனா். அதேபோல், ஏழை மாணவா்கள் பலரும் நீட் தோ்வில் வெற்றி பெற்று தங்களின் கனவை நனவாக்கியுள்ளனா். இதில், குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவியான தர்ஷனா மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தமிழகத்தில் 3 -ஆம் இடம் பிடித்துள்ளார்.

 

இதுகுறித்து, மாணவி நம்மிடம் கூறும்போது, "அப்பா நாராயணபிள்ளை வெல்டிங் தொழிலாளி. 1 -ஆம் வகுப்பில் இருந்து 12 -ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தான் படித்தேன். 2015-ல் 7 -ஆம் வகுப்பு இறுதித் தோ்வு எழுத, பேருந்துக்காக காத்திருக்கும்போது கார் மோதி எனது இடது கால் முறிந்தது. பின்னா் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் செயற்கைக் கால் பொருத்தினார்கள். நான் 1 -ஆம் வகுப்பு படிக்கும் போது எனது ஆசிரியா், 'நீ என்னவாகப் போகிறாய்?' என்று கேட்டார். சற்றும் யோசிக்காமல் உடனே 'டாக்டா்' என்று கூறினேன்.

 

அதில் இருந்து என் மனதில் டாக்டர் எண்ணம் பதிந்தது. இதனால் என் காலை இழந்தபோதும் தன்னம்பிக்கையை இழக்காமல் நன்றாகப் படித்தேன். நீட் தோ்வில் எழுத விண்ணப்பம் செய்துவிட்டு மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு மருத்துவா்கள் நீட் தோ்வுக்குச் சம்மந்தமான 'வினா - விடை' புத்தகங்கள் தந்தனா். அந்த புத்தகங்களை தான் நன்றாகப் படித்தேன். இதற்காக கோச்சிங் கிளாஸ்க்கு எங்கும் செல்லவில்லை. நீட் தோ்வில் 3-ஆவது இடம் கிடைத்தது பெருமையாக உள்ளது. அதுவும் என்னுடைய தன்னம்பிக்கை தான் வென்றது. மாநில மொழிக் கல்வியை நன்றாகப் படித்தாலே 'நீட்' தேர்வில் வெற்றி பெறலாம்" என்றார்.

 

Ad

 

இந்நிலையில், நேரில் சென்று இந்த மாணவிக்கு வாழ்த்துத் தெரிவித்தார் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.