Skip to main content

'போக்சோ' சட்டத்தில் 35 வயது நபர் கைது..!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

35-year-old arrested under Pokso Act


விழுப்புரம் மாவட்டம், மானூர் காவல் நிலையம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த 39 வயது மாயவன் என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

 

சிறுமியின் பெற்றோர்கள் அளித்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த ஆரோவில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த மாயவனைக் கைது செய்து 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்