Skip to main content

பாஜகவுடன் திமுக ஏன் நேரடியாக மோதவில்லை: சீமான் கேள்வி

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 

நக்கீரன் இணையதளத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு பேட்டி அளித்தார்.

 

திரைத்துறையில் இருந்து வந்தவர் நீங்கள். திரைத்துறையில் இருப்பவர்கள் பாஜக வேண்டாம் என்கிறார்கள். மேலும் சிலர் இந்த நேரத்தில் பாஜகவும் வேண்டாம், காங்கிரஸூம் வேண்டாம் என்று சொல்வதே இயல்பாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கிற மாதிரி இருக்கிறது என்கிறார்களே?

 

seeman


 

அது சுத்த பைத்தியக்காரத்தனம். காங்கிரஸ், பாஜகவுக்கு ஒரு மாற்று சொல்லுங்கள். மதவாதத்திற்கு நாங்கதான் எதிர் என்று பேசுகிறது திமுக. முதலில் பாஜகவை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்த கட்சி அது. ஒன்றுமே இல்லாததை ஒன்றாக்கியது யார்?
 

சில நிபந்தனைகளோடதான் அந்த கூட்டணி அமைந்தது?
 

நிபந்தனை நிபந்தனை என்று பேசக்கூடாது. செஞ்சீங்களா இல்லையா? சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, அதனை எதிர்த்து தமிழ்நாட்டில் போராடினீர்கள். ஆனால் மத்தியில் காங்கிரஸ் அதனை கொண்டு வரும்போது ஆதரித்தீர்கள். இங்க எதிர்த்துவிட்டு, அங்கு ஆதரித்துள்ளீர்களே என்று கலைஞரிடம் கேட்கும்போது, மதவாத சக்திக்கு எதிராக வந்துவிடும் என்றார். இரண்டு மாதம் கழித்து ஏற்காடு இடைத்தேர்தலில் எங்களை ஆதரியுங்கள் என்று பாஜகவிடம் ஆதரவு கடிதம் கேட்டார். இது என்ன மதவாத எதிர்ப்பு. 

 

இந்த மண்ணில் பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது. எத்தனை இடங்களில் திமுக நேரடியாக மோதுகிறது. தூத்துக்குடியில் கனிமொழியை அறிவித்த பிறகு, தமிழிசை அந்த தொகுதியில் நின்றுவிட்டார்கள். தவிர்க்க முடியாமல் நிற்கிறார்கள். மற்ற நான்கு இடங்களில் ஏன் உதயசூரியன் சின்னத்தில் நேரடியாக யுத்தம் செய்து நிற்கவில்லை. அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று முடிவு செஞ்சீங்கல்ல ஏன் போட்டியிடவில்லை. சிவகங்கையிலும், நாகர்கோவிலிலும் என்ன செய்தீர்கள். கூட்டணிக்கு கொடுத்துவிட்டு விலகிவீட்டீர்கள். மற்ற இரண்டு இடங்களை முஸ்லீம் லீக் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கொடுத்துவிட்டு விலகிக்கொண்டீர்கள். 
 

ஒரு போர் வீரன் யுத்தத்திற்கு நேரடியாக போக வேண்டும். வேற ஆளை அனுப்பிவிட்டு நான்தான் எதிரின்னு சொல்வதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது. தமிழ்நாட்டில் பாஜக எங்கு இருக்கிறது. ஒன்றுமில்லாதவனை அடிக்க ஏன் ஊரை திரட்டுக்கொண்டு வரணும். வடஇந்தியாவில் அவர்களை வீழ்த்துவதற்கு மாயாவதியும், அகிலேஷ் யாதவும் திட்டம் வைத்திருக்கிறார்கள். மம்தா பானர்ஜி திட்டம் வைத்திருக்கிறார்கள். நீங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள். 
 

நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிறது அதில் எந்த கருத்தை முன்வைப்பீர்கள். ஆட்சியின் சாதனையை சொல்லுங்கள். மதவாதம் என்று நீங்கள் பேசாதீர்கள். உங்க ஜெகத்கஸ்பர் எழுதுகிறார் கிருத்துவ மக்கள் எல்லோரும் சேர்ந்து திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று. இதை படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள். இவர்கள் எல்லாம் இங்கு போகிறார்கள். நாம் பாஜகவுக்கு போக வேண்டும் என்று நினைக்க மாட்டார்களா? இது எவ்வளவு பெரிய மறைமுக வளர்ச்சி. 

 

mkstalin


 

திமுகவிலும் இந்துக்கள் இருக்கிறார்களே?
 

BJPயின் B டீமே திமுகதான். வருபவர்களை நீங்க எப்படி பார்க்கிறீர்கள். மதமாக பார்க்கிறீர்கள். அப்போது நீங்களும் பிஜேபிதானே. 90 விழுக்காடு இந்து என்று ஸ்டாலினுக்கு எப்படி தெரியும். வருபவர்களை இந்துவா, இஸ்லாமியரா என்று பார்க்கிறீர்கள். நீங்க ஏன் ஒரு சீட்டுக்கூட இஸ்லாமியர்களுக்கு கொடுக்கவில்லை. அப்போது நீங்களும் பிஜேபிதானே. பிஜேபியுடன் அதிமுக கூட்டணி வைத்துவிட்டது. இதற்கு பிறகு கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் ஓட்டு விழாது என்று அது முடிவு செய்துவிட்டது. அதனால் அதிமுக சீட்டு கொடுக்கவில்லை. நீங்கள் ஏன் சீட் கொடுக்கவில்லை. உங்களுக்கும் பிஜேபிக்கும் வித்தியாசம் என்ன? 



 

கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சி இருக்கிறதே?
 

கூட்டணி வைத்ததால் சீட். ஒரு சீட் கொடுத்ததால் நாடு எங்கும் உள்ள ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். மண்புழுவை போட்டு மீனை பிடித்துவிடலாம் என்று நினைக்கிறது. மண்புழுவின் எடை என்ன. மீனின் எடை என்ன? இது எந்த மாதிரியான அணுகுமுறை. எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்றுவீர்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.