Skip to main content

ராகுல்காந்தி எங்கு சென்றாலும் காங்கிரஸ் அழியும்! - உபி முதல்வர் யோகி

Published on 11/03/2018 | Edited on 11/03/2018

ராகுல்காந்தி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் காங்கிரஸ் அழிவைச் சந்திக்கும் என உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளியேவந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘ராகுல்காந்தியின் முறையீடுகளை மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள். அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் காங்கிரஸ் அழிவைச் சந்திக்கும் என்பதே உண்மை. ஏனெனில், அவர் எதிர்மறையான மனநிலையோடு வேலைசெய்கிறார்’ என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

முன்னதாக மலேசியா சென்றுள்ள ராகுல்காந்தி அங்கு பேசும்போது, ‘ஒருவேளை நான் பிரதமராக இருந்து என் கையில் பணமதிப்பிழப்பு என்று எழுதப்பட்ட கோப்புகள் கொடுக்கப்படுமானால், அதை குப்பைத் தொட்டியிலோ, அறைக்கு வெளியிலோ வீசிவிடுவேன்’ என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்