Skip to main content

''மனசாட்சியை தொட்டு சொல்லுங்க போரை நடத்தியது யார்...? அப்படித்தான் எதிர்ப்பேன்'' -சீமான் கோபம்!

Published on 19/12/2021 | Edited on 19/12/2021

 

Touch your conscience and tell me who waged the war? -Seeman Anger!

 

அண்மையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி சார்பாக பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில் திமுகவை விமர்சித்ததோடு காலணியை எடுத்துக்காட்டியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக திமுகவின் ஐ.டி விங் தரப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

 

இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''என் கட்சியில் 90 விழுக்காடு இந்துக்கள்தான் என்று சொன்னது நானா... அவரா... நீங்களே சொல்லுங்கள். அப்பொழுது நீங்கள் தான் 90 விழுக்காடு சங்கி, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பிஜேபி வந்துரும் என்று பொய்ப்பிரச்சாரம் செய்தீர்கள். பிஜேபி வராமல் இருப்பதற்கு நீங்கள் செய்த வேலை என்ன? வெறுமனே கட்டமைப்பது பாஜகவின் பீ டீம் என்று போகிற போக்கில் திரும்பு திரும்ப அதையே பேசிக் கொண்டிருப்பது. இதுதான் திராவிட ஃபிராடு. அவர்களுடைய வேலையே இதுதான். காலம்காலமாக போய் பேசி அதையே கட்டமைத்து அதை உண்மை போல ஆக்குவது தான் அவர்களுடைய வேலை. அங்கிருந்துதானே நான் வந்திருக்கிறேன் என்ன பண்ணுவாங்க என்று எனக்கு தெரியாதா? அதனால்தான் நீங்கதான் உண்மையான சங்கி என சொல்ல வேண்டிய நிலை வருகிறது. தேவையில்லாமல் சங்கி சங்கி என்றெல்லாம் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தால் வெறுப்பு வருமா வராதா... நானும் மனுஷன் தானே.  இன்று பொறுப்பும் கடமையும் கையளிக்கப்பட்டிருப்பதால் பொறுமையாக இருக்கிறேன்.

 

மதவாதத்திற்கு எதிரானவர்கள் என்கிறீர்கள் ஏன் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வில்லை. அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால்தானே. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்த நீங்கள் இஸ்லாமியர் என்பதாலேயே விடுதலை செய்யவில்லை. இது எவ்வளவு பெரிய பாசிசம். எவ்வளவு பெரிய மதவாதபோக்கு. ஆனால் வெளியில் நீங்கள் சொல்லும்போது மதவாதத்திற்கு எதிரானவர்கள் என்று சொல்வீர்கள். முதல்வரே பேசியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது 'அப்பாவி இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வதற்காவது எனக்கு வாக்கு தாருங்கள்' என பேசியுள்ளார். வாக்கும் தந்தாச்சு ஏன் விடுதலை செய்யவில்லை. சாதி ஆணவப்படுகொலை என்பதை தமிழ் படுத்தினேன். சாதி ஆணவம் என்று சொல்கிறீர்கள் அதை தமிழில் சொல்லுங்கள்... தமிழன் தமிழில் பேசுவதில் என்ன பிரச்சனை. கன்னியாகுமரியில் நடந்த கொலைக்கு நான் ஒரே ஒருத்தன் மட்டும் தான் குரல்கொடுத்திருந்தேன். யாராவது ஒருவர் இதைப் பற்றி பேசி இருந்தார்களா? ஆணவப்படுகொலையை நான் என்னவோ ஆதரித்துக் கொண்டிருப்பதுபோல் சொல்கிறீர்கள். 'சாதி தமிழ் இல்லை தமிழனுக்கு சாதி இல்லை'  என்றார்.

 

அப்போது செய்தியாளர் ஒருவர் நீங்கள் பிற கட்சிகளை எதிர்ப்பதை விட திமுகவை தான் அதிகமாக எதிர்க்கிறீர்கள் என கேள்வி எழுப்ப,

 

''அப்படித்தான் எதிர்ப்பேன்... அப்படித்தான் தம்பி எதிர்ப்பேன்... காரணம் திமுக எனது இனத்தை கொன்ற துரோகி. கலைஞருக்கு எங்க அண்ணனை பிடிக்காது.  எனக்கு கலைஞரை பிடிக்காது போதுமா... என் இனத்தை கொன்றது காங்கிரஸ்... கூட நின்றது திமுக... அதை வேடிக்கை பார்த்தது அதிமுக-பாஜக எனவே எல்லாருமே எனக்கு எதிரிதான். சம தராசில் வைத்து தான் நான் சண்டை போடுவேன்.  உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் போரை நடத்தியது காங்கிரஸா இல்லையா. மற்றவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்தவர்கள். அடுத்தவர்கள் எல்லாம் சொல்லி தெரிந்து கொள்ளக்கூடிய இடத்தில் நான் இல்லை நானே சான்று. எந்த அளவிற்கு கலைஞர் தமிழினத்திற்கு துரோகம் செய்தார் என்று தெரியும். அதிமுக சரியில்லை ஆனால் அதிமுகவை பிரசவித்த தாய் திமுக. மோடி சரியில்லை சரி, அந்த மோடியை ஆட்சியில் உட்கார வைத்தது யாரு... காங்கிரஸ் 10 ஆண்டுகால அதிகாரத்தை சரியாக, ஒழுங்காக, முறையாக நிர்வாகத்தை செய்திருந்தால் மோடி எப்படி வருவார். நீ செய்த அயோக்கியத்தனத்தால் வந்த குழந்தைதான் மோடி. பாஜக இவ்வளவு பெரும்பான்மையுடன் வெல்வதற்கு காரணமே காங்கிரஸ் தான். எதை எதிர்க்க வேண்டும் எதை எதிர்க்கக் கூடாது என்பதை நாங்கள் தான் முடிவு எடுப்போம்'' என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.