Skip to main content

திமுகவின் முப்பெரும் விழா... விளம்பரம் செய்வது தொடர்பாக சலசலப்பு

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

 


செப்டம்பர் 15ந் தேதி திருவண்ணாமலை நகரில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இதற்காக 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை தெற்கு மா.செ எ.வ.வேலு எம்.எல்.ஏ செய்து வருகிறார்.
 


இந்த முப்பெரும் விழா பிரமாண்டமாக இருக்க வேண்டும், எந்த சலசலப்பும் வந்துவிடக்கூடாது என பிற மாவட்ட நிர்வாகிகளை வரவேற்க வரவேற்பு குழு, உணவு உபசரிப்பு குழு, தங்க வைத்தல் குழு, விளம்பர குழு, பந்தல் அமைப்பு குழு, பிற மாவட்டத்தினர் கோயில், கிரிவலம் போக நினைத்தால் அதற்கான கைடு குழு என தனித்தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

t.malai dmk


இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து மாவட்டத்தில் உள்ள திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை முப்பெரும் விழா விளம்பர குழுவை சேர்ந்த இருவர் சந்தித்தனர். நீங்கள் பத்திரிக்கைக்கு விளம்பரம் தரும்போது இந்த டிசைனில் இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த வாக்கியங்கள் தான் இடம்பெற வேண்டும், இந்த புகைப்படங்கள், இன்னார் படங்கள் மட்டும்மே இருக்க வேண்டும், வேறு யார் புகைப்படமும் விளம்பரத்தில் வரக்கூடாது எனச்சொல்லி டிசைன் செய்யப்பட்ட விளம்பரங்களை தந்துவிட்டு வந்துள்ளனர். இதுதான் கட்சியின் சில நிர்வாகிகளை கொதிக்கவைத்துள்ளது.


 


இதுப்பற்றி நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர், முப்பெரும் விழாவில் உதயநிதி ஸ்டாலின்க்கு விளம்பரத்தில் முக்கியத்துவம் தரனும் அப்படின்னு சூசகமா சொல்லியிருக்காங்க. விளம்பரத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், தலைவர், இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி படத்தை தவிர வேறு யார் படமும் இருக்ககூடாதுன்னு சொல்லியிருக்காங்க. அதிலும் உதயநிதி படம் பெரியதா இருக்கனும் சொல்லி விளம்பர டிசைன்ல அதுக்கு தான் முக்கியத்துவம் தந்துயிருக்காங்க. யார் விளம்பரம் தந்தாலும் இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி படம் கண்டிப்பா இருக்கனும்ன்னு சொல்லியிருக்காங்க. சில விளம்பர டிசைன்களில் கலைஞர் படமே சின்னதா போட்டுயிருக்காங்க.





மாநில இளைஞரணி அமைப்பாளர் என்கிற முறையில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிள் தரும் விளம்பரத்தில் அவருக்கு முக்கியத்துவம் தரலாம், பிற அணி நிர்வாகிள் தரும் விளம்பரத்தில் தங்களது அணியின் மாநில அமைப்பாளர் படம் இருக்க வேண்டும் என நினைக்கமாட்டார்களா?, நாளை அந்த அணியின் மாநில அமைப்பாளர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் அந்த அணியின் மாவட்ட, ஒன்றிய அணி நிர்வாகிகள் என்ன சொல்வார்கள் என கேள்வி எழுப்பினார்.
 

t.malai dmk



கட்சி நிர்வாகிகள் சொந்த காசை போட்டு தான் விளம்பரம் தருகிறார்கள், அதில் யார் படம் போடவேண்டும் என்கிற உரிமை கூட அவர்களுக்கு கிடையாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது, அதேபோல் இந்த பத்திரிக்கைக்கு தான் விளம்பரம் தரவேண்டும் என்பதையும் சூசகமாக தெரிவிக்கிறார்கள். கலைஞரை, திமுகவை கடுமையாக எதிர்த்தது சில பத்திரிக்கைகள். ஆனால், அந்த பத்திரிக்கைகளை கூட கலைஞர் என்றும் புறக்கணித்ததில்லை. உள்ளுரில் அரசியல் செய்ய வேண்டும்மென்றால் நாங்கள் அனைத்து பத்திரிக்கை, மீடியாக்களுடன் நட்பாக இருந்தால் மட்டும்மே முடியும். சில நிர்வாகிகளை போல நாங்கள் செய்தியாளர்களை மிரட்ட முடியும்மா என கேள்வி எழுப்பியவர். இதுப்பற்றி கேட்டால், என் படத்தையே எந்த விளம்பரத்திலும் போட வேண்டாமன்னு சொல்றேன். வேணும்ன்னா விளம்பரம் தர்றவங்க படத்தை போட்டுக்கங்கன்னு மா.செ தரப்பில் இருந்து சொல்றாங்க என கொதித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.