Skip to main content

அதிரடி அரசியலைத் துவக்கிய மு.க.ஸ்டாலின்! அதிர்ச்சியில் எடப்பாடி டீம்!

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

 

அதிமுக - பாஜக கூட்டணியில் தே.மு.தி.க. இணையும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்ததால் தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வரும் யோசனை ஸ்டாலினுக்கு இருக்கவில்லை. பாமகவிடம் மட்டுமே ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியபடி இருந்தனர். பேரங்கள் படியாத நிலையில் அதிமுக பக்கம் தாவியது பாமக. அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததை அடுத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு உருவானது. 
 

பாஜகவும் அக்கூட்டணியில் இணைந்ததை அடுத்து அதிமுக கூட்டணிதான் வலிமையானது என்கிற தோற்றம் உருவானது. மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வர விஜயகாந்தை சந்தித்து பேசியது பாஜக தலைமை. விஜயகாந்தின் உடல்நலன் கருதி அவரை சிரமப்படுத்துவதை தவிர்த்து பிரேமலதாவிடமும், சுதீசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் பாஜக மூத்த தலைவர் பியூஸ் கோயல். 

 

dmdk-bjp


அப்போது பல்வேறு புள்ளிவிபரங்களைச் சுட்டிக்காட்டி விட்டு தங்களுக்கான டிமாண்ட்டை முன்வைத்த பிரேமலாதா, "பாமகவை விட அதிக வலிமை கொண்ட கட்சி தேமுதிக. அவர்களுக்கு வட தமிழகத்தில் மட்டும்தான் கட்டமைப்பு உள்ளது. ஆனா, தேமுதிகவுக்கு தமிழகம் முழுவதும் வலிமையான கட்டமைப்பு இருக்கிறது. அதனால், 8 லோக்சபா சீட்டும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வேண்டும். பாமகவிற்கு தேர்தல் நிதி தந்தது போல எங்களுக்கும் 500 சி தரப்பட வேண்டும் " என கோரிக்கை வைத்தார். 
 

அதை கேட்டு மிரண்டு போனார் பியூஸ்கோயல். அங்கிருந்தபடியே அமைச்சர் தங்கமணியை தொடர்புகொண்டு விவாதித்துவிட்டு, " அதிமுக தரப்பில் 3 சீட்டுகள் மட்டுமே ஒதுக்க முடியும் என சொல்கின்றனர். ராஜ்யசபா சீட் கிடையாது. அதற்கு பதிலாக உள்ளாட்சி தேர்தலில் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் " என தெரிவித்திருக்கிறார்.

 

dmdk-congress

 

இதனை ஏற்க மறுத்த பிரேமலதாவும் சுதீசும் இறுதியாக, "8 சீட்டிலிருந்து ஒன்றை குறத்துக் கொள்கிறோம். 7 சீட்டும், 500 சி யும் எனில் ஓ.கே.! அதே சமயம் , அதிமுக மேடைகளில் ஏறமாட்டோம். இடைத்தேர்தல் தொகுதியில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்யமாட்டோம். பாஜகவுடன் தான் எங்களுக்கு கூட்டணி " என கறாராக தெரிவித்திருக்கிறார்கள். இதில், பியுஸ்கோயலுக்கே உடன்பாடில்லை. உடனே, தேமுதிக தலைமையின் விருப்பத்தை அதிமுக தலைமைக்கு பியூஸ்கோயல் தெரிவித்த போது, " போகாதா ஊருக்கு வழி கேட்கிறார்கள். அவர்களது டிமான்டுகளை ஏற்பது சாத்தியமல்ல. தேமுதிகவை விட்டுவிடுவோம்" என அழுத்தமாக தெரிவித்துவிட்டார் எடப்பாடி. 
 

இந்த நிலையில்தான், " உங்களின் எதிர்பார்ப்பு மிரட்சியாக இருக்கிறது. 3 சீட் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். தேர்தல் செலவுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். மற்றபடி உங்கள் முடிவு" என சுதீசிடம் கூறிவிட்டு கிளம்பிவிட்டார் பியூஸ் கோயல். இதனால் அப் செட்டானார் பிரேமலதா. அப்போது, திமுக கூட்டணி குறித்து யோசித்தனர். திமுகவின் மனநிலையை அறிந்துகொள்ள திருநாவுக்கரசை அழைத்தார் சுதிஷ். அதன்பேரிலேயே விஜயகாந்தின் உடல்நலத்தை விசாரிப்பதற்காக சென்றார் திருநாவுக்கரசர். 
 

விஜயகாந்தை சந்தித்துவிட்டு திரும்பிய  திருநாவுக்கரசர், சந்திப்பின் விபரங்களை திமுக தலைமைக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து , கட்சியின் மூத்த தலைவர்களிடம் விவாதித்திருக்கிறார் ஸ்டாலின். அந்த விவாதத்தில் , " தேமுதிகவை நம் பக்கம் கொண்டு வரலாம் " என பலரும் கருத்துக்களை வெளிப்படுத்திய நிலையில், விஜயகாந்தை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் ஸ்டாலின். 

 

stalin-vijayagath-dmk-dmdk


விஜயகாந்துடனான ஸ்டாலினின் சந்திப்பு அதிமுக தரப்புக்கு கிலியை உருவாக்கியிருக்கிறது. இந்த சந்திப்பு குறித்து தேமுதிக தரப்பில் விசாரித்தபோது, " கூட்டணி குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 லோக்சபா ஒதுக்கியிருப்பதால் அதே எண்ணிக்கையை கேட்டுள்ளோம். திமுக தரப்பில் 4 சீட்டுக்கு ஓகே சொல்லியிருக்கிறார்கள். அதேசமயம், காங்கிரஸ் தலைமையிடம் பேசிவிட்டு இறுதி முடிவை தெரிவிப்பதாக சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ஒரு வேளை , காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 10 சீட்டில் ஓரிரு  சீட்டுகளை விட்டுத்தருமாறு கேட்டு அதனையும் சேர்த்து எங்களுக்கு  தரலாம் என திமுக திட்டமிடுவதாக தெரிகிறது " என்கின்றனர்.


இதற்கிடையே, தேமுதிகவை வளைக்க திமுக எடுத்து வரும் முயற்சியில் அதிர்ச்சியைடைந்திருக்கும் எடப்பாடி, தற்போது 5 சீட்டுகள் தருகிறோம் என தேமுதிக தலைமைக்கு தகவல் அனுப்பியபடி இருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

கோடை இளவரசியைக் காணச் சென்ற முதல்வர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
The Chief Minister is coming to see the summer princess with sentiment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் பகுதியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் கோடை இளவரசியான கொடைக்கானலை காண வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், கோடை வெயிலை தணிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலத்தீவு செல்வதாக இருந்தது. ஆனால், திடீரென அதை ரத்து செய்துவிட்டு கோடை இளவரசி கொடைக்கானலை காண முடிவு செய்தார். அதன் அடிப்படையில், இன்று காலை 29ம்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்ட முதல்வர் அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானலில் உள்ள பாம்பார்புரத்தில் இருக்கும் தயாரா ஸ்டார் ஹோட்டலில் மே 4ஆம் தேதி வரை தங்க இருக்கிறார். 

முதல்வர் கொடைக்கானல் வருகையை ஒட்டி கொடைக்கானல் மூஞ்சி கல்லிலிருந்து பாம்பார்புரம் வரும் வரை சாலைகள் பேண்டேஜ் ஒர்க் பார்க்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து, இன்று காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரை வத்தலக்குண்டு காட் ரோடு வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு கொடைக்கானல் மலைப்பகுதியில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவிட்டுள்ளார். அதுபோல், முதல்வர் பாதுகாப்புக்காக எஸ்.பி தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பி, 2 டி.எஸ்.பி, ரெண்டு இன்ஸ்பெக்டர், பத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

The Chief Minister is coming to see the summer princess with sentiment

கடந்த 2019ல் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே முதன் முதலில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தவர், அங்குள்ள கால்டன் ஹோட்டலில் ஒரு வாரம் தங்கி இருந்து விட்டு சென்றார். அதன் பின், பாராளுமன்றத் தேர்தல் முடிவில் 40க்கு 39 தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. அதேபோல் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே கொடைக்கானல் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பம்பார்புரம் தமாரா ஸ்டார் ஓட்டலில் தங்கி விட்டு சென்ற பின்பு தான் நூற்றுக்கு மேற்பட்ட சீட்டுகள் வாங்கியதன் பெயரில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாதம் இருக்கும் சூழ்நிலையில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். 

பாம்பாராபுரத்தில் தங்கிய தமாரா ஹோட்டலில் ஒரு வாரம் குடும்பத்தாருடன் தங்கி ஓய்வெடுக்க இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் யாரையும் முதல்வர் சந்திக்க விரும்பவில்லை. ஆனால், அரசியல் ரீதியாக மந்திரி சபை மாற்றம் மற்றும் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கொண்டு வருவதற்கான ஆலோசனையும் குடும்பத்தாருடன் பேசி முதல்வர் முடிவெடுக்க இருக்கிறார் என்ற பேச்சும் இருந்து வருகிறது. இப்படி சென்டிமென்ட் மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலையும் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியை ரசித்து விட்டு செல்வது போலத்தான் தற்பொழுதும் கோடை இளவரசியைக் காண கொடைக்கானல் வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, முதல்வர் வருகையையொட்டி, அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.