Skip to main content

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கவிஞர் சினேகன்..! (படங்கள்)

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி மநீம வேட்பாளர்கள் சென்னை முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் சென்னை விருகம்பக்கம் தொகுதிக்குட்பட்ட கோயம்பேடு பகுதியில் உள்ள சேமாத்தம்மன் நகரில் மக்கள் நீதி மையம் வேட்பாளர் கவிஞர் சினேகன் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மக்களோடு ஒன்றாத பாஜக அரசை அப்புறப்படுத்த வேண்டும்" - கமல்ஹாசன்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024

சிதம்பரம் மேல வீதியில் திமுக கூட்டணியில்  விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல். திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து புதன்கிழமை இரவு மக்கள் நீதி மையம் தலைவர்  கமல்ஹாசன் வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது  பாஜக ஒன்றிய அரசு அல்ல, மக்களோடு ஒன்றாத அரசு; இதனை அப்புறப்படுத்த வேண்டும். குரலற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தையாக திருமாவளவன் திகழ்ந்து வருகிறார். அவரை 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அளவில் கூடியிருந்த பொதுமக்களிடம் வலியுத்தி பேசினார்.

மேலும் அவர், "எல்லா சித்தாந்தாங்களும் மக்களுக்காக தான். அதற்காக தான் நாங்கள் அனைவரும் தோலுரசி களம் கண்டு வருகிறோம். பாஜக இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று அறிஞர்கள் கவலைப்படுவார்கள். நாங்கள் வீரர்கள் களம் கண்டு வருகிறோம். நாங்கள் தியாகம் செய்யவில்லை வியூகம் செய்துள்ளோம், இன்றைய தேவையை அன்றே உணர்ந்து வந்தவர் திருமாவளவன். மானுட சமூகம் பின்னோக்கி இழுக்கப்படும் என்று தன் வாழ்வை சமூகத்திற்கு கொடுத்தவர். எதிரிகளை ஜனநாயகப் படுத்துவது என்றால் எதிரிகள் யாருமில்லை என்று உணர்வது தான்.

நான் சாதியம் தான் என் வாழ்வின் முதல் எதிரி என்று அரசியலுக்கு வருவதற்கு முன்பே முடிவு செய்துவிட்டேன். சாதிகள் இல்லை. எனது படங்களில் சாதி பெயர் வருகிறது என்று நீங்கள் நினைக்கலாம், குடியை பற்றி படம் எடுக்க வேண்டும் என்றால் குடிகாரனைத்தான் மையப்படுத்த வேண்டும், அது போல தான் இது. இன்னும் எத்தனை பேர் அடிமை விலங்கோடு  உள்ளனர் என்பதை அறியவே சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கிறோம். ஆங்கிலேயர்கள் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு சனாதனவாதிகள் பதறினார்கள். மண்டல் கமிஷனை விபி சிங்  அமல்படுத்த முயன்றபோது அதனை தடுக்க முயன்றவர்கள் தான் சனாதானவாதிகள்.  தமிழக மீனவர்களை‌ காக்கத்தவறியது இந்த பாஜக அரசு.. 10 ஆண்டுகளில் மத்திய அரசு ஒன்றுமே செய்யவில்லை. விவசாயிகள் பிரச்சனையில் ஆதார விலையை தராமல், ஆதரவு விலையை தருவதாக கூறினார்கள், எதையும் செய்யவில்லை. இதனை எதிர்த்த விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் குண்டு வீசியும்  ஆணிப்படுக்கையும் அமைத்து எதிரியைப்போல நடத்தினார்கள்.

உனக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம் என கேட்பவர்களுக்கு நான் நகரத்தில் இருந்தாலும், தினமும் சோறு சாப்பிடுகிறேன். அந்த நன்றிக்கு தான் பேசுகிறேன். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார்கள். ஆனால் ஒருவருக்கும் வேலை கொடுக்கவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மலிவுவிலையில் மக்கள் சொத்தை வாரி வழங்கி வருகின்றனர். சட்டத்தை வளைத்து அதிகாரப்பூர்வமாக பணத்தை பறிக்கும் முறை தான் தேர்தல் பத்திரத்திட்டம். தொழிலதிபர்களை வழிக்கு கொண்டு வர அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றை பாஜக ஏவி வருகிறது. தமிழர்களின் குரலாக திகழ்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருமா ஒடுக்கப்பட்டோருக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு என அனைவருக்குமான தலைவர். சமத்துவ அரசியல் சமையலுக்கு உகந்தது பானை. பாஜக அரசு சமூக நீதிக்கு எதிரானது. இந்தியாவே சிதம்பரத்தை திரும்பி பார்க்கும் அளவுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து திருமாவளவனை வெற்றி பெற செய்யுங்கள்" என்றார்.  வேட்பாளர் திருமாவளவன், திமுக மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏரானமானவர்கள் கலந்து  கொண்டனர்.

Next Story

நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி கைது

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
actress and bjp member jayalakshmi arrest

பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகன், தான் நடத்தி வருகிற ‘சினேகம்’ என்ற அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலிக் கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமியின் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பிறகு அதே பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் ஜெயலட்சுமி, பொதுவெளியில் தன் மீது அவதூறு பேசியுள்ளதாக சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். 

பின்பு இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்திலும் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். அதனடிப்படையில் திருமங்கலம் காவல்துறையினர் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சினேகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, திருமங்கலம் போலீஸார் சினேகன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது. 

இதனிடையே சினேகன், தான் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது சென்னை திருமங்கலம் போலீசார் சட்டப் பிரிவு 420 மற்றும் 465 என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். 

இந்த நிலையில், இன்று சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள ஜெயலட்சுமி வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். 3 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது ஜெயலட்சுமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.