Skip to main content

சசிகலா புஷ்பா, திருச்சி சிவா உள்பட 6 எம்.பி.க்களின்...

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

 

டெல்லி மாநிலங்களவையில் (ராஜ்ய சபா) மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில சிறந்து விளங்கும் 12 உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிப்பார்.

 

sasikala pushpa trichy siva



12 பேர்களை தவிர்த்து மற்றவர்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களால் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்கள் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
 

திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சர்ந்த டி.கே.ரங்கராஜன், அதிமுகவைச் சேர்ந்த சசிகலா புஷ்பா (தற்போது இவர் பாஜகவில் உள்ளார்), அதிமுகவைச் சேர்ந்த விஜிலா சத்யானந்த், மேட்டுபபாளையம் செல்வராஜ், முத்து கருப்பன் ஆகியோர் தற்போது ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் நிறைவடைகிறது.
 

இதனால் 6 புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க இந்த மாதம் அறிவிப்பு வெளியாக உள்ளது. அ.தி.மு.க.வில் 3 எம்.பி.க்களும், தி.மு.க.வில் 3 எம்.பி.க்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.

Next Story

"மோடியின் ஆட்சி ஏழைகளுக்கு எதிரானது” - விருதுநகரில் திருச்சி சிவா பிரச்சாரம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 Trichy Siva campaign in Virudhunagar Modi's rule for the rich is against the poor

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து விருதுநகரில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், திமுக  கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, “பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை 108 முறை மோடி அதிகரித்துள்ளார். அப்படி கூட்டியதால், அப்போது 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  மன்மோகன் சிங்  ஆட்சியில் இருந்தபோது 500ரூபாயாக இருந்த கேஸ் விலை,  தற்போது 1000 ரூபாயாகிவிட்டது. இப்படி மக்களிடம் வசூலித்த பணம் 7.75 லட்சம் கோடி.  அந்தப் பணத்தை வைத்து சாமானியர்களுக்கு  கடன் கொடுக்காமல்,  பணக்காரத் தொழிலதிபர்களுக்கு 10ஆயிரம் கோடி,  12 ஆயிரம் கோடி எனக்  கடன் கொடுத்து,  அவர்கள் அனைவரும் கடனைத் திருப்பி அடைக்காமல் வெளிநாட்டில் ஜாலியாக வாழ்கிறார்கள்.

அவர்களை பாஜக அரசு கண்டுகொள்ளாமல், ரூபாய் 10 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது.  மோடி அரசு பணக்காரர்களுக்கான அரசு. விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்யவில்லை.  மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனைத் தள்ளுபடி செய்யவில்லை.  எல்.ஐ.சி.  உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தார்கள். எப்போதும் ஏழைகளுக்கு எதிராகவே நடக்கும் ஆட்சிதான் மோடியின் ஆட்சி.  அதன் கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம். ஏழை,  பணக்காரர் என அனைவருக்கும் வாக்கு சமமாக இருக்கிறது. 

உங்களை யாரும் கட்டாயப்படுத்தியோ,  பணம் கொடுத்தோ வாக்கு செலுத்த வைக்க முடியாது.   நீங்கள் யாருக்கு வாக்கு செலுத்தப்போகிறீர்கள் என்பது ரகசியமானது. சிறந்த பாதுகாப்போடுதான் வாக்கு செலுத்துவீர்கள்.  உங்களை ஆளுகின்ற அரசாங்கம் சரியாக இல்லை என்றால் உங்கள் வாக்கால் அதைத் தூக்கி எறியுங்கள்.” என்று பேசினார்.