Skip to main content

முந்தி சொன்ன ஓபிஎஸ்; தேதி குறித்த ஈபிஎஸ்; பரபரப்பாகும் அதிமுக

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

OPS said earlier; Dated EPS; AIADMK is in a frenzy

 

கடந்த சனிக்கிழமை அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த ஆலோசனைக் கூட்டம் நாளை (டிச.21) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில், அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற; சட்டமன்ற உறுப்பினர்கள், கழகச் செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 27 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அதிமுக தலைமைச் செயலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

மேலும், அந்த அறிக்கையில் இக்கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஈபிஎஸ் ஒப்புதலோடு வெளியிடப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

 

ஒரு வாரத்திற்குள் ஈபிஎஸ் தரப்பும் ஓபிஎஸ் தரப்பும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்த இருப்பதால் அதிமுக பரபரப்பாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்