Skip to main content

நடராஜன் உடல் தஞ்சை வந்தது; சசிகலாவும் கூடவே வந்தார்

Published on 20/03/2018 | Edited on 20/03/2018
sasikala natarajan

 

புதிய பார்வை ஆசிரியரும் சசிகலா கனவருமான நடராஜனின் உடல் தஞ்சாவூர் அருளானந்தம் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

 

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சென்னை குலோபல் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்த நடராஜன், நேற்று இரவு  காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. 

 

இந்தநிலையில் பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா பரோல் கேட்டு சில நாட்களுக்கு முன்பிளிருந்தே மனு செய்திருந்தார், ஆனால் மறுக்கப்பட்டுவந்தநிலையில், இன்று தஞ்சையை தவிர எங்கும் செல்லக்கூடாது, பத்திரிக்கையாளர்களை சந்திக்கக்கூடாது என்கிற நிபந்தனைகளோடு 15 நாள்பரோல் வழங்கப்பட்டது.

 

 பெங்களுருவில் இருந்து காரில் புறப்பட்டு தஞ்சைக்கு வந்தார். அவரோடு நான்கு கார்கள் மட்டுமே வந்தது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து நடராஜனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு கொண்டுவரப்பட்டது. ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே திருச்சிக்கு வந்துவிட்ட சசிகலா திருச்சி துவாக்குடி டோல்கேட்டில் ஆம்புலன்ஸ் வரும்வரை 35 நிமிடம் காரிலேயே காத்திருந்தார். அவரோடு வந்த பெங்களுரூ புகழேந்தியும் கட்சிக்காரர்களும் முன்னாடியே வந்துவிட்டனர். 

 

நடராஜனின் உடல் சுமந்துவந்த ஆம்புலன்ஸ்க்கு பின்னாடியே 6.45 க்கு தஞ்சை வந்து சேர்ந்தார். அங்கு மாலை நான்கு மணிக்கே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்தது. 

 

நடராஜனின் உடல் தஞ்சையில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நாளை மாலை நான்கு மணிக்கு ஊர்வலமாக சென்று விளார் அருகே அடக்கம் செய்யப்படவுள்ளது. 


தஞ்சைக்கு டி,டி,வி,தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்,எல்,ஏக்கள் அனைவரும் ஆஜராகியுள்ளனர். 

 

காலை 11 மணியில் இருந்து திவாகரனும் அவரது ஆதரவாளரான திருவாரூர் மா,செ எஸ்,காமராஜீம் துக்கம் விசாரிக்க வருபவர்களை அனுசரித்து அனுப்பிக்கொண்டிருந்தார். அவரது மகன் ஜெய்ஆனந்தும் திவாகரன் மனைவியும் நடராஜன் உடல் வருவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே வந்தனர். 

 

தஞ்சை அருளானந்தம் நகரமே மாலை 4 மணி முதல் பரபரப்பாகியிருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் - புகைப்படங்கள் வைரல்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajith kumar in cricketer natarajan birthday party

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில்,  சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய பந்துவீச்சு, பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக “யார்க்கர் கிங்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது இந்திய அணி வெற்றி பெற அவருடைய பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனிடையே தனது சொந்த ஊரில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானம் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது பயோ-பிக் உருவாகுவதாகவும் அதில் சிவகார்த்திகேயன் நடராஜனாக நடிக்கவுள்ளதாகவும் 2022ஆம் ஆண்டு தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் அதுகுறித்து வெளியாகவில்லை. 

ajith kumar in cricketer natarajan birthday party

இந்த நிலையில், இன்று நடராஜன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். மேலும் நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்த விழா நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட், பேட், அக்லி படத்தில் நடிக்கவுள்ளார். 

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.