Skip to main content

"தன்னுடைய மொத்த ரகசியங்களும் லீக் ஆகிவிட்டதே என்று அண்ணாமலை பதறுகிறார்" - கடம்பூர் ராஜு

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

kadampur raju talks about bjp party it wing current situation and annamalai behaviour

 

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தோல்விக்குப் பின்பு, எடப்பாடியே கெட் அவுட் என்றும் எட்டுத் தோல்வி எடப்பாடி என்றும் அ.தி.மு.க தொண்டர்களே வெளிப்படையாக போஸ்டர்களை ஒட்டி அமர்க்களப்படுத்தியது ஒருபக்கம் இருந்தாலும் இப்போது எடப்பாடிக்கு எதிராக பாஜகவும் கிளம்பியிருப்பது பரபரப்பு சூட்டைக் கிளப்பியுள்ளது.

 

இந்தச் சூழலில் தமிழக பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைமை நிர்வாகியான நிர்மல்குமார் மற்றும் ஐ.டி.விங்கின் மாநில செயலாளரான திலிப் கண்ணன் இருவரும் விலகி அடுத்தடுத்து இ.பி.எஸ்ஸை சந்தித்து அ.தி.மு.கவில் ஐக்கியமானது பா.ஜ.க.வை மட்டுமல்ல குறிப்பாக மாநில தலைவர் அண்ணாமலையின் அடிவயிற்றை கலங்க வைத்திருக்கிறதாம். அதன் வெளிப்பாடே கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தி இருக்கிறார் அண்ணாமலை.

 

இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க.வின் இளைஞரணி தலைவரான தினேஷ் ரோடி மற்றும் நான்கு நிர்வாகிகள் என ஐந்து பேர்களும் தினேஷ் ரோடியுடன் இணைந்து கடந்த ஏழாம் தேதி மாலை கோவில்பட்டி நகரின் ஒதுக்குப் புறமான இனாம் மணியாச்சி சாலை பிரிவில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடியின் உருவப் படங்களை எரித்தவர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். எடப்பாடியை கண்டித்து துரோகி எடப்பாடி என்று போஸ்டரும் ஒட்டியிருந்தனர். எங்கள் கூட்டணியில் இருந்து கொண்டே எங்கள் கட்சியின் முக்கிய புள்ளிகளை வளைத்து தன் கட்சியில் சேர்த்திருக்கிறார் எடப்பாடி. இது கூட்டணி தர்மத்திற்கு எதிரானதாகும். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் வினை உண்டு. அதை வெளிப்படுத்தவும் எங்களின் எதிர்ப்பைக் காட்டவுமே இந்தப் போராட்டம் என்றார் தினேஷ் ரோடி.

 

kadampur raju talks about bjp party it wing current situation and annamalai behaviour

இது குறித்து நாம் கோவில்பட்டி அ.தி.மு.கவின் எம்.எல்.ஏ.வும் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜுவிடம் கேட்டதில்,  "ஆரம்பத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க.கூட்டணி ஏற்பட்டபோதே எங்கள் கட்சியின் சோழவந்தான் எம்.எல்.ஏ.வும், நயினார் நாகேந்திரனும் பா.ஜ.கவிற்குப் போன போதே இணைத்துக் கொண்டவர்கள். அ.தி.மு.க. தன் கூட்டணி கட்சி என யோசித்தார்களா. இல்லையே. அதனை நாங்கள் பெரிதுபடுத்தவில்லையே. கௌரவமாக எடுத்துக் கொண்டோம். அதைப் போன்றே பா.ஜ.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்ததை பா.ஜ.க.பெருந்தன்மையாக கௌரவமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கட்சியின் ஒட்டு மொத்த ரகசியங்களும், நிர்வாகச் செயல்பாடுகளையும் கொண்டு மூளையாகச் செயல்படுவது ஐ.டி.விங் அதன் இரண்டு தலைமை நிர்வாகிகள் அங்கிருந்து விலகி அவர்களின் விருப்பப்படி இணைந்துள்ளனர். கௌரவமாக எடுத்துக் கொள்ளுங்கள். தன்னுடைய மொத்த ரகசியங்களும் லீக் ஆகிவிட்டதே... எங்களுக்கு வந்து விட்டதே என்று அண்ணாமலை பதறுகிறார். அது டெல்லி வரை எதிரொலித்திருக்கிறது" என்றார் அழுத்தமாக.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.