Skip to main content

‘கனத்த இதயத்துடன் தேமுதிகவிலிருந்து வெளியேறுகிறேன்’ - முகநூலில் பதிவிட்ட தேமுதிக பிரமுகர்!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

‘I leave DMDK with a heavy heart’- DMDK politician posted on Facebook

 

நடந்து முடிந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் அமமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக வேட்பாளர்கள் முழுமையாக தோல்வியைச் சந்தித்தனர். கட்சியின் நிறுவனத் தலைவரான விஜயகாந்த், உடல்நிலை காரணமாக கட்சியைத் தொடர்ந்து வழிநடத்த முடியாத நிலையில், கட்சிப் பொறுப்பை முழுமையாக அவரது மனைவி பிரேமலதா கையில் எடுக்கத் துவங்கினார்.  

 

தற்போது கட்சியின் முழு பணிகளையும் அவர் செய்துவரும் நிலையில், கட்சியின் நிலையை அறிந்துகொண்டு நிர்வாகிகள் ஒவ்வொருவராக கட்சியைவிட்டு விலக ஆரம்பித்துள்ளனர். அதில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான கிருஷ்ணகோபால், நடந்து முடிந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இவர், கடந்த 2016ஆம் ஆண்டும் தேமுதிக தலைமையிலான மக்கள்நல கூட்டணியில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அதிலும் தோல்வியைச் சந்தித்தார். இந்நிலையில், அவர் இன்று (15.10.2021) தன்னுடைய முகநூல் பக்கத்தில் கட்சியிலிருந்து தான் விலகுவதாக பதிவிட்டுள்ளார்.

 

‘I leave DMDK with a heavy heart’- DMDK politician posted on Facebook

 

அந்தப் பதிவில், ‘கனத்த இதயத்துடன் தேமுதிகவிலிருந்து வெளியேறுகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. மேலும் அந்தப் பதிவில், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான பற்றால் தேமுதிகவில் இணைந்து செயல்பட்டுவந்தேன். இதுநாள்வரை கட்சியை ஒருபோதும் குறை கூறியதில்லை; இனிமேலும் நான் கூறப்போவதில்லை. நான் விலகுவதாக அந்த அறிவிப்பு வெளியிட்டவுடன் பலர் என்னைத் தொடர்புகொண்டனர். இருப்பினும் நான் என்னுடைய முடிவில் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன்’ என்று தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

ads

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மக்களவைத் தேர்தல்; போட்டியின்றி தேர்வான பா.ஜ.க வேட்பாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
BJP candidate selected without competition at Lok Sabha elections

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உட்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாக கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதனால், சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.