Skip to main content

திமுகவிற்கு படையெடுக்கும் முன்னாள் எம்.எல்.ஏ க்கள் 

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

dmdk

 

கோவை கவுண்டம்பாளையம் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். 

 

கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பலகோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து, புதியதாக தொடங்க இருக்கும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது மாற்றுக்கட்சிகளில் இருந்து 55000 பேர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

 

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அழைப்பின் பேரில் இந்த இணைப்பு நடந்தது. பல கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் அதிமுக கட்சியின் கொங்கு மண்டல முக்கிய பிரமுகருமான ஆறுகுட்டி நேற்று திமுகவில் இணைந்தார். இவர் 2011 மற்றும் 2016ல் அதிமுகவின் சார்பில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார். மேலும் தேமுதிக கட்சியின் கோவை மாவட்ட செயலாளரும் முன்னாள் சூலூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆன  தினகரன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி போன்றோர் நேற்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழக அரசைக் கண்டித்து தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 25/06/2024 | Edited on 25/06/2024

 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்களால் ஏற்பட்ட அவலத்திற்கு தமிழக அரசு தான் காரணம் என்று கூறி அரசைக் கண்டித்து, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக  இன்று கள்ளக்குறிச்சியில் பிரேமலதா விஜயகாந்த் காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார்.

Next Story

சாராய வேட்டையில் சிக்கிய வெளிமாநில மது பாட்டில்கள்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
nn

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்புடைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சட்டவிரோத மது விற்பனை மற்றும் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த இரண்டு நாட்களில் 1,382 மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பொள்ளாச்சி பெண்ணாபுரம் பிரிவு பகுதியில் கடந்த 22ஆம் தேதி மதுவிலக்கு போலீசார ஆய்வு செய்த பொழுது சரக்கு வாகனத்தில் வெளி மாநிலம் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் ராம் நகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு அது தொடர்பாக 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். இப்படியாக பொள்ளாச்சியில் கடந்த இரண்டு நாட்களில் 1,382 வெளிமாநில மது பாட்டில்களும் அவற்றை விற்க முயன்றவர்களும் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.