Skip to main content

அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவின் லட்சியத்துக்கு தினகரன் ஒரு சுமை! - நாஞ்சில் சம்பத் அதிரடி அட்டாக்! 

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

Dinakaran is a burden to Sasikala's ambition to capture ADMK! - Nanjil Sampath

 

சசிகலாவுக்கும் தினகரனுக்கும் மோதல் என்றும், சசிகலா கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சிகளிலும் அமமுகவினர் கலந்துகொள்ளக் கூடாது என தினகரன் தடை விதித்திருக்கிறார் என்றும் கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாடு அரசியலில் எதிரொலித்தபடி இருக்கிறது. இந்தச் சூழலில், இதுகுறித்து பேட்டியளித்த தினகரன், “அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்காக சசிகலா ‘க்ளைம்’ (உரிமை) பண்ணிவருகிறார். அது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் இருக்கிறது. இந்த நிலையில், அமமுகவினர் கலந்துகொள்வது சட்டச் சிக்கலை உருவாக்கலாம் என்பதால் எங்கள் கட்சி நிர்வாகிகள் தவிர்த்திருக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

இப்படி தினகரன் சொல்லியிருக்கும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் விருப்ப மனு வாங்குவதற்கான நிகழ்ச்சிகளில் சசிகலாவின் பெயரையும் அவரது புகைப்படத்தையும் பயன்படுத்திவருகின்றனர் அமமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள். தினகரன் சொல்வது உண்மையெனில், அவரது நிர்வாகிகள் சசிகலாவின் படத்தை ஏன் பயன்படுத்த வேண்டும்? இதனால் சட்டச் சிக்கல்கள் உருவாகாதா? என்றெல்லாம் சர்ச்சைகள் எதிரொலிக்கச் செய்கின்றன.

 

இந்தச் சூழலில், அமமுகவின் முன்னாள் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் இதுகுறித்து நாம் பேசியபோது, “டி.டி.வி. தினகரன் திசை தெரியாமல் தடுமாறுகிறார்; தத்தளிக்கிறார். தமிழக அரசியலில் அவரை ஆதரித்து நான் பேசிய காலக்கட்டங்களில், அன்றைக்கு வெள்ளம்போல் வந்த இளைஞர்கள் கூட்டத்தில் இன்று ஒருவர் கூட தினகரனிடம் இல்லை. எல்லோரும் விலகிச் சென்றுவிட்டார்கள்.

 

Dinakaran is a burden to Sasikala's ambition to capture ADMK! - Nanjil Sampath
கோப்புப் படம்  

 

ஒரு நம்பகத்தன்மை இல்லாத மனிதன் டி.டி.வி. தினகரன். அவர் என்ன நினைக்கிறார்? என்ன கருதுகிறார்? எப்படி பயணிக்கப் போகிறார்? என்பதை அவர் வெளிப்படையாக எப்போதும் சொன்னதில்லை. ஆகவே, இப்படி உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக நாடகமாடும் டி.டி.வி. தினகரன், இன்றைக்கு சசிகலா அம்மையாரின் படத்தைப் போட்ட விருப்ப மனு படிவத்தை விநியோகித்திருக்கிறார் என்றால், சசிகலா இல்லாமல் அவருடைய தயவும் தாட்சண்யமும் இல்லாமல் ஒரு நிமிடம் கூட அவரால் இயங்க முடியாது என்பது தற்போது உண்மையாகியிருக்கிறது.

 

அதே நேரத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக சசிகலா அம்மையார் முன்வருகிறபோது, அந்த நிகழ்ச்சிக்கு அமமுக நிர்வாகிகள் போகக் கூடாது என தடுக்கிறார். ஆகவே, வெளிப்படையாக, மிக கேவலமாக ரெட்டை வேடம் போடுகின்ற தினகரனை நம்புவதற்கு யாருமே தயாராக இல்லை. 

 

சசிகலாவின் படத்தை அச்சிடாமல் விருப்ப மனு படிவத்தைக் கொடுத்திருந்தால் விருப்ப மனுவைக் கூட ஒருத்தரும் தாக்கல் செய்திருக்க மாட்டார்கள். அமமுகவின் இன்றைய நிலைமை இதுதான் என்றால், நாளைக்கு அதிமுகவுக்கும் அந்த நிலைமைதான் வரும்.  அதனால், சசிகலா என்பவர் தவிர்க்க முடியாதவராக மிக சாதுர்யத்துடனும் சாணக்கியத்தனத்துடனும் அரசியல் செய்கிறார்.

 

அவர் இதுவரைக்கும் டி.டி.வி. தினகரனின் பெயரையோ, அமமுக பெயரையோ உச்சரிக்கவில்லை. நடந்து முடிந்த பொதுத்தேர்தலானாலும், உள்ளாட்சி மன்றத் தேர்தலானாலும் அமமுகவிற்கு ஆதரவு தாருங்கள் என ஒரு இடத்தில் கூட சசிகலா கேட்கவில்லை. ஆகவே, அதிமுகவுக்குத் தலைமை தாங்கக் கூடிய லட்சியத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிற சசிகலா அம்மையாருக்கு, டி.டி.வி. தினகரன் ஒரு சுமையாக இருக்கிறார்; ஒரு தடையாக இருக்கிறார் என்பதுதான் உண்மை. 

 

Dinakaran is a burden to Sasikala's ambition to capture ADMK! - Nanjil Sampath

 

ஆகவே, நிர்தாட்சியமாக, டி.டி.வி. தினகரனை நிராகரித்துவிட்டுப் பயணத்தை தொடங்கியுள்ள சசிகலா, தினகரனை அலட்சியப்படுத்துவது மட்டுமல்ல; அரசியலில் இருந்து தினகரனை அப்புறப்படுத்தவும் முன்வர வேண்டும். அப்போதுதான் சசிகலாவின் பயணம், அவரது இலக்கை எட்டுவதற்கு துணை நிற்கும்” என்றார் மிக அதிரடியாக.

 

தொடர்ந்து நம்மிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்காக சசிகலாவின் உரிமை கோரும் முயற்சிக்கு சட்டச் சிக்கல் வந்துவிடக் கூடாது என தினகரன் சொல்வது, அரசியலில் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவர் தருகிற மரண வாக்குமூலம் அது. சசிகலா இவரை எப்போதும் சேர்த்துக்கொள்ள மாட்டார். அவரை தனது லட்சியத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் கருத மாட்டார். அவருடைய பயணத்தில் ஒரு இடத்துக்கும் இனி அழைக்க மாட்டார். ஆகவே, டி.டி.வி. தினகரன் ஒரு அரசியல் அனாதை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விரைவில் தெரியும்” என்று அணுகுண்டு போல வெடித்தார் நாஞ்சில் சம்பத்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.

Next Story

“ஓ.பி.எஸ்-ஐயும், தினகரனையும் பாஜக மிரட்டி போட்டியிட வைத்துள்ளது” - முதல்வர் ஸ்டாலின்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
mk stalin BJP has threatened OPS and Dinakaran to contest

தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்,  திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் இருவரையும் அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அ.தி.மு.க.வும் - பா.ம.க.வும் அன்றைக்குக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. அதுதான் உண்மை. இந்த இரண்டு துரோகத்தையும் மனதாரச் செய்த கட்சிகள்தான் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும். இந்தச் சட்டங்களை ஆதரித்து, ஓட்டுப் போட்ட பா.ம.க. இப்போது பா.ஜ.க.வுடன் அமைத்திருப்பது சந்தர்ப்பவாதக் கூட்டணி. மருத்துவர் அய்யா ராமதாசு நிலைமையைப் பார்த்து அவர்கள் கட்சிக்காரர்களே தலைகுனிந்து நிற்கிறார்கள். இதற்கு மேல் அவரை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அடுத்து, தேனி தொகுதியில் பா.ஜ.க. ஆதரவு பெற்ற வேட்பாளராக ஒருவர் நிற்கிறார். யார்? தினகரன். இதே பா.ஜ.க.வைப் பற்றி அவர் என்ன சொல்லி இருந்தார்? “பா.ஜ.க. கூட்டணியில் சேர்வது தற்கொலை செய்வதற்குச் சமம். யாராவது தெரிந்தே கிணற்றில் விழுவார்களா?” என்று கேட்டவர். இப்போது என்ன தெரிந்தே கிணற்றில் விழ வந்திருக்கிறாரா? என்பதுதான் தேனிக்காரர்கள் கேட்க வேண்டிய கேள்வி.

அதுமட்டுமல்ல, இன்னும் பேசியிருக்கிறார். 'டெல்லியில் வேண்டும் என்றால் பெரிய கட்சியாக, ஆளும் கட்சியாக பா.ஜ.க. இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு என்ன இருக்கிறது? நோட்டாவுடன் போட்டி போடக் கூடிய கட்சிதான் பா.ஜ.க.” என்று சொன்னவர்தான் இந்தத் தினகரன். அவரைப் பார்த்து நீங்கள் கேட்க வேண்டும். இன்று நோட்டாவுடன் போட்டி போடத் தேனிக்கு வந்திருக்கிறீர்களா? இல்லை உங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வந்திருக்கிறீர்களா? நான் சென்ற கூட்டங்களில் சொன்னது போன்று, மோடி வாரண்டியுடன் ஒரு வாஷிங் மெஷின் வைத்திருக்கிறார். அதில் ஊழல்வாதிகளை உள்ளே அனுப்பினால், அவர்கள் சுத்தமாகி வெளியே வந்துவிடுவார்கள்.

“மேட் இன் பி.ஜே.பி.” வாசிங் மெஷின் அது. மேட் இன் ஜப்பான், மேட் இன் அமரிக்கா, மேட் இன் இங்கிலாந்து மெஷின் இது. அந்தக் கட்சியில் கூட்டணி வைத்துக் கொண்டால், அந்த வாஷிங் மெஷின் வெளுத்துவிடும். அப்படி வெளுக்கப்பட்டு பா.ஜ.க. கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் தினகரன்.1995-96ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து 62 இலட்சத்து 61 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அங்கீகாரம் அற்ற முகவர் மூலமாகப் பெற்று, இங்கிலாந்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகக் கொடுத்ததாக, அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கியவர்தான் இந்த தினகரன். ‘ஃபெரா’ போன்ற சொற்களைத், தமிழ்நாட்டில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை தினகரனுக்குத்தான் உண்டு. இந்த வழக்கை 30 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அபராதமாக விதித்தது. இப்போது புரிகிறதா? ஏன் இவர் பா.ஜ.க.வுக்குச் சென்றார் என்று.

mk stalin BJP has threatened OPS and Dinakaran to contest

அதுமட்டுமல்ல, அம்மையார் மறையும்வரை, போயஸ் கார்டனுக்குள் நுழைய முடியாமல் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந்தவர் தினகரன். காரணம் என்ன? அம்மையார் சொத்துக் குவிப்பு வழக்கோடு தன்னுடைய வழக்கைச் சேர்த்தால், தனக்கும் தண்டனை கிடைத்துவிடும். அதனால் இரண்டு வழக்கையும் தனியாக நடத்த வேண்டும் என்று அம்மையார் ஜெயலலிதாவின் வக்கீலையே மிரட்டியதால் விரட்டப்பட்டவர். கடைசியாக, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, சசிகலாவால் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட தினகரன்தான், இப்போது வழக்குகளுக்கு பயந்து, சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, மோடி வாஷிங் மெஷின் மூலமாகத் தேனிக்குள் நுழைந்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளைத் தோற்கடிக்க வேண்டும். தேனி மக்களே ஏமாந்துவிடாதீர்கள். கடந்த முறை பன்னீர்செல்வம் மகனிடம் ஏமாந்துவிட்டீர்கள். இந்த முறை, சசிகலா குடும்பத்திடம் ஏமாந்துவிடாதீர்கள். ஓ.பி.எஸ் நிலைமை என்ன? இரண்டு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரை இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரை அவமானப்படுத்த, அவரை மிரட்டி இராமநாதபுரத்தில் நிற்க வைத்திருக்கிறது பா.ஜ.க. தலைமை. தினகரனை மிரட்டித் தேனியில் நிற்க வைத்திருக்கிறார்கள். இப்படி, பா.ஜ.க.வின் தொங்கு சதைகளான பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் என்று யாராக இருந்தாலும், பா.ஜ.க.வுக்குக் கொடுக்கும் அதே தண்டனையைக் கொடுங்கள். பா.ஜ.க.வுக்கு சொந்த செல்வாக்கு இல்லாததால் பன்னீர்செல்வம், தினகரன் போன்ற வாடகை மனிதர்களை வைத்து, தேர்தலைச் சந்திக்கிறது. ‘B-டீம்’-ஆகப் பழனிசாமியின் அ.தி.மு.க.வைக் குத்தகைக்கு எடுத்து, தனியாக நிற்க வைத்திருக்கிறது. சொந்தமாக முடிவெடுக்க முடியாமல், கீ கொடுத்த பொம்மைபோல் அ.தி.மு.க.வை ஆட்டுவிக்கிறது பா.ஜ.க.

இவர்களை மொத்தமாகத் தோற்கடிக்க வேண்டாமா? தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் வஞ்சகம் செய்யும் பா.ஜ.க. கூட்டத்திற்கும் துரோகம் இழைக்கும் பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் மற்றும் பா.ம.க. ஆகிய அடிமைக் கூட்டத்திற்கும், திண்டுக்கல், தேனி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அதற்கு, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சச்சிதானந்தம் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும். தமிழ்நாட்டைக் காக்கட்டும். நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்” என்று கூறினார்.