Skip to main content

இவர்களின் எச்சரிக்கைக்கு 3 வயது குழந்தை கூட பயப்படாது: டிடிவி தினகரன்

Published on 17/07/2018 | Edited on 17/07/2018
T. T. V. Dhinakaran


பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார் டிடிவி தினகரன்.
 

அப்போது அவர் கூறியதாவது,
 

எஸ்.பி.கே. நிறுவனத்தில் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி சுப்பிரமணியம் போன்றவர்களெல்லாம் இயக்குநர்கள். அதுபோல 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சாலை அமைப்பதற்கு ஒப்பந்தத்தை எஸ்.பி.கே. நிறுவனத்திற்குத் தான் கொடுத்துள்ளதாக வெற்றிவேல் ஏற்கனவே சொல்லியிருந்தார். அங்குதான் தற்போது ரெய்டு போய்கொண்டிருக்கிறதா?
 

 

 

பருப்பு கொள்முதல் செய்ததில் ஊழல் பற்றி கேட்டதற்கு அமைச்சர் காமராஜ் சமாளித்து பேசுகிறர். இன்னும் சில நாட்களில் எல்லாம் வெளிவரும். துரோகத்தை கருவோடு அறுக்க வேண்டும் என்பார்கள். அதனால் கருவுள்ள முட்டை வடிவிலிருந்து வெளிவர துவங்கியிருக்கிறது. 
 

கோயல்பல்சு குமாருக்கு, அமைச்சர் ஜெயக்குமார் நாக்கு எப்படி வேண்டுமென்றாலும் பேசும். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தவறானவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ரெய்டு வர ஆரம்பித்தவுடன் எச்சரிக்கை விடுப்பதுபோல என்ன வேண்டுமென்றாலும் பேசுவார்கள். இவர்கள் விடும் எச்சரிக்கைக்கு 3வயது குழந்தை கூட பயப்படாது என்றார். 

 

சார்ந்த செய்திகள்