Skip to main content

விலை உயர்வுதான் பொதுமக்களுக்கு புத்தாண்டு, பொங்கல் பரிசா? 

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

 



பொதுமக்களுக்கு புத்தாண்டு, பொங்கல் பரிசாக திங்கட்கிழமை காலை முதல் முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00 ரூபாய்  உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளன. தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
 

ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனங்களும், தமிழகத்தைச் சார்ந்த தனியார் பால் நிறுவனங்களும் பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தைக் கூறி கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் மூன்று முறை (பிப்ரவரி, ஜுன் மற்றும் செப்டம்பர்) லிட்டருக்கு 8.00ரூபாய் வரை பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை உயர்த்தின.

 

milk


 

இந்நிலையில் மகராஷ்ட்ராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனமான ‘பராக் டெய்ரி” நிறுவனம் பால் கொள்முதல் விலை உயர்வு என்கிற காரணத்தை சுட்டிக் காட்டி கடந்த 12.01.2020 முதல் தங்களது பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00ரூபாய் வரை சத்தமின்றி உயர்த்தியது.
 

பராக் டெய்ரி நிறுவனத்தின் விற்பனை விலை உயர்வைத் தொடர்ந்து தற்போது ஹெரிடேஜ், ஆரோக்யா, டோட்லா மற்றும் ளுமுயு டெய்ரி உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு என்கிற காரணத்தைக் கூறி வரும் 20.01.2020 முதல் தங்களது பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00ரூபாய் வரை உயர்த்துவாக சுற்றறிக்கை மூலம் பால் முகவர்களுக்கு தெரிவித்துள்ளது. 


 

 

அத்துடன் மேற்கண்ட தனியார் பால் நிறுவனங்களைத் தொடர்ந்து இதர அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை வரும் வாரத்தில் உயர்த்திட முடிவு செய்துள்ளன.
 

பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தைக் கூறி கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 8.00ரூபாய் வரை உயர்த்திய தனியர் பால் நிறுவனங்கள் தற்போது தமிழகத்தில் பால் தட்டுப்பாடு என்கிற புது காரணம் கூறி 2020ம் ஆண்டின் துவக்கத்திலேயே பால் விற்பனை விலையை உயர்த்த தொடங்கியிருப்பதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.


 

 

மேலும் தமிழகத்தில் சுமார் 83.4மூ பால் தேவைகளுக்கு பொதுமக்களும், தேனீர் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களும் தனியார் பால் நிறுவனங்களையே சார்ந்திருப்பதால் இந்த தன்னிச்சையான தொடர் பால் விற்பனை விலை உயர்வின் காரணமாக ‘தேனீர், காபி உள்ளிட்ட பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விற்பனை விலை கடுமையாக உயரும் சூழல் உருவாகியுள்ளது.
 

தமிழகத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 1.5 கோடி லிட்டர் பால் தேவை என்கிற சூழ்நிலையில் அதனை ஆவின் நிறுவனத்தின் சார்பில் பூர்த்தி செய்திட உரிய நடவடிக்கை எடுக்காமலும், பொய்யான காரணங்களை கூறி பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் வகையில் ஆண்டுக்கு மூன்று, நான்கு முறை பால் விற்பனை விலையை உர்த்துவதோடு, அந்நிறுவனங்களின் பால் விற்பனை வீழ்ச்சியடையும் போதெல்லாம் பால் கொள்முதல் விலையை குறைத்து பால் உற்பத்தியாளர்களை நஷ்டப்பட வைப்பதையுமே வாடிக்கையாக கொண்டிருக்கும் தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைபடுத்தி, அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விற்பனை விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய தமிழக அரசு அமைதியாக இருப்பதை காண்கையில் அரசும், துறை சார்ந்த அமைச்சரும் தனியார் பால் நிறுவனங்களோடு மறைமுக ஒப்பந்தத்தில் இருக்கின்றனரோ..? என்கிற சந்தேகம் எழுகிறது.

 

milk


 

உயிரைக் குடிக்கும் மதுவெனும் விஷத்தை டாஸ்மாக் மூலம் விற்பனை செய்ய இலக்கு வைத்து செயல்படும் தமிழக அரசு உயிர் காக்கும் அத்தியவசியப் பொருளான பால் விற்பனையை ஆவின் மூலம் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
 

எனவே மேற்கண்ட தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அதனை தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை எடுப்பதோடு, வருங்காலங்களில் அரசு அனுமதி இன்றி பால் விற்பனை விலையை உயர்த்திட தடை விதித்து உத்தரவிடுமாறு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவின் மாதாந்திர பால் அட்டையில் மாற்றம்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
A change in the monthly milk card

ஆவின் மாதாந்திர பால் அட்டையை எளிய நடைமுறையில் காகிதமில்லா முறையில் அறிமுகம் செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “எளிய நடைமுறையில் காகிதமில்லா ஆவின் மாதாந்திர பால் அட்டை அறிமுகம் செய்யப்படுகிறது. பெருநகரச் சென்னை மாநகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பால் அட்டை விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தற்போது காகிதமில்லா பால் www.aavin.tn.gov.in இணையதளத்தின் மூலம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்கள் ஆவின் வட்டார அலுவலகங்கள் மூலமாகவும், இணையதளம் மூலம் பதிவு செய்யும்பொழுது அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இக்குறுஞ்செய்தியைக் கொண்டு நுகர்வோர்கள் ஆவின் பால் டெப்போக்களில் காண்பித்து பால் வகைகளை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள காகித பால் அட்டையையும் ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் முனிசிபல் சாலை, அந்தோனியார் கோயில் தெரு, சண்முகபுரம், ஹவுசிங் போர்டு காலனி, பெரிசன் காம்ப்ளக்ஸ் சாலை, டீச்சர்ஸ் காலனி, 3வது மைல் பாலம் அருகில், தமிழ்ச் சாலை, 3வது மைல் பாலகம், ஸ்டேட் பாங்க் காலனி, கோபாலராயபுரம், சாயர்புரம், கருங்குளம் உள்ளிட்ட 13 பகுதிகளில் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி ஆவின் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் லிட்டர் பால் வழங்கிய நிறுவனம்

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
 company provided 5000 liters of milk to the people affected by the storm

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டது. காற்றின் வேகம் குறைவு என்றாலும், கடும் மழை சென்னை வாழ் மக்களை நிலைகுழையச் செய்துவிட்டது. நகரில் ஆள் உயரத்திற்கு தண்ணீர் சென்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடிசை வீடுகளிலும், மாடிவீட்டு கீழ்தளங்களிலும் குடியிருந்தவர்களின் வீட்டில் உள்ள அத்தனை உடமைகளும் நாசமானது. இதனை உணர்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னைவாழ் மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் உள்ள அனவயல் பாரத் பால் நிறுவனம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைவாழ் மக்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 5 ஆயிரம் லிட்டர் பாக்கெட் பாலுடன், பாரத் பால் நிறுவன இயக்குநர்கள், ஊழியர்கள் சென்னை சென்று பெரும்பாக்கம் பகுதி மக்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில், பொதுமக்களுக்கு பால் பாக்கெட் வழங்கியதுடன் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டனர்.

5 ஆயிரம் லிட்டர் பாக்கெட் பால் வழங்கிய பாரத்பால் நிறுவனத்தினர் நம்மிடம், புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் எப்படி எல்லாம் அவதிப்படுவார்கள், கஷ்டப்படுவார்கள் என்பதை 2018 கஜா புயலின் தாக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டு உணர்ந்தவர்கள் நாங்கள். பல நாட்கள் குடிதண்ணீர், மின்சாரம் கூட கிடைக்காமல் அவதிப்பட்டோம். ஆனால் சென்னையில் அதெல்லாம் சில நாட்களிலேயே கிடைத்துவிட்டது. எங்கள் மக்களுக்கு எங்கிருந்தெல்லாமோ நிவாரணம் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஆனால் மக்கள் உடனே வேலைக்கு போகவோ அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவோ முடியாத நிலையில் இருப்பார்கள் என்பதால், எங்கள் பாரத் பால் நிறுவனம் சார்பில் 5 லட்சம் லிட்டர் பால் கொண்டு வந்து அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் பொதுமக்களிடம் நேரடியாக வழங்கி இருக்கிறோம் என்றனர்.