Skip to main content

ஈ.பி.எஸ். போட்ட உத்தரவு... குஷியான ஈரோடு அதிமுகவினர்

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

EPS held meeting with erode admk members

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சி காங்கிரஸுக்கு தொகுதியை ஒதுக்கி, காங்கிரஸ் கட்சி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து களப்பணியைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது.

 

எதிரணியான அதிமுகவில் எடப்பாடியும், ஓ. பன்னீர்செல்வம் முட்டி மோதி வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளரை அறிவிக்கத் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆளை விடுங்க ஐயா.... என ஒவ்வொருவராகக் கும்பிடு போட்டு வருகிறார்கள் அதிமுகவினர். 

 

இந்த நிலையில் திமுக தேர்தல் பணிமனையைத் திறந்து, வேகமாக களப்பணி ஆற்றுவதில் அதிமுக நாங்களும் களத்தில் இறங்கி விட்டோம் என்பதை காட்ட எடப்பாடி பழனிச்சாமி 26 ஆம் தேதி காலை ஈரோட்டுக்கு நேரில் வந்துள்ளார். ஈரோடு வருவதற்கு முன்பு நசியனூர் என்ற பகுதியில் இருக்கும் அவரது குலதெய்வ கோயிலுக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்று தனது குல தெய்வத்தை மனம் உருக வேண்டி நல்ல வேட்பாளர் கிடைக்க வேண்டும்... இந்த தேர்தலில் தன் அணிக்கு அதிக வாக்குகள் பெற்று தனக்கு மரியாதையைக் கொடுக்க வேண்டும்... அதற்கு சாமியே நீதான் அருள் புரிய வேண்டும்.. என வேண்டிக் கொண்டார். அவரோடு முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவினர் பலரும் கோயிலுக்கு வந்திருந்தனர். 

 

பிறகு ஈரோடு வில்லரசம் பட்டியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் உயர்மட்ட நிர்வாகிகளோடு ஈரோடு மாவட்ட அதிமுகவினரோடும் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி, மிக விரைவாக நாம் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். வேட்பாளருக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன் செய்வார்கள் என அங்கிருந்த அதிமுகவினரிடம் அறிவித்திருக்கிறார். இதன் பிறகே அதிமுக  குழுவில் கொஞ்சம் உற்சாகம் காணப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.