Skip to main content

மின் கட்டணத்தில் குளறுபடி... ஈரோடு தி.மு.க. ஆர்பாட்டம்...

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

 

கரோனா என்ற இந்த கொடிய காலத்தில் அன்றாடம் உழைத்து பிழைக்கும் ஏழைகள் முதல், சிறு, குறு தொழில் புரிவோர், தனியார் துறைகளில் பணிபுரியும் நடுத்தர வர்க்க குடும்பத்தினர் முதல் வறுமை, குடும்ப கஷ்டம், கடன் சுமை என வாழ்வியல் போராட்டம் இப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 

இந்த நிலையில் தமிழக அரசின் மின்சார வாரியம் ஏற்கனவே முந்தைய மாதங்களில் பொதுமக்கள் அவர்களில் வீடுகளில் பயன்படுத்திய மின் அளவை கணக்கிட்டு அதை செலுத்துமாறு மக்களிடம் திணித்துள்ளது. அதேபோல் சிறு, குறு தொழில் புரியும் உற்பத்தியாளர்களையும் மின் கட்டணம் செலுத்துமாறு நிர்பந்தித்துள்ளது. இந்த கொடிய வைரஸ் தொற்று காலத்தில் ஏற்கனவே பொருளாதார சுமையால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு மின் கட்டணம் அதிக பாரமாக அவர்கள் தலையில் ஏறி உள்ளது. இது பொதுமக்களுக்கு செய்யும் துரோகம் என தமிழக அரசை கண்டித்து எதிர்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து கண்டனக்குரல் எழுப்பி வந்தது.

 

மேலும் மின்கட்டணத்தில் பல குளறுபடிகள் உள்ளது அவை சரி செய்யப்பட வேண்டும் முழுமையான கட்டனத்தை கட்ட நிர்பந்தம் செய்யக்கூடாது. மற்ற மாநிலங்களில் 25 சதவீதம் குறைத்துள்ளதுபோல், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்ததோடு தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, இன்று 21 ந் தேதி தமிழகம் முழுக்க தி.மு.க.வினர் தங்கள் இல்லங்களில் கருப்புக்கொடி ஏற்றி வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என தி.மு.க. தலைமை அறிவித்தது.

 

ஈரோட்டில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையில், அவர் வீடு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதேபோல் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவரது மாணிக்கம்பாளையம் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

அதேபோல திமுக மாநில மற்றொரு துணை பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் அவர் இல்லத்தின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பினார். ஈரோடு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் பவானியில் கட்சியினருடன் சேர்ந்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

 

அதேபோல் ஈரோடு  திமுகவினர் பலரும் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, மின்கட்டணத்தை மக்கள் தலையில் சுமத்தாதே... ரத்து செய் ரத்து செய் மின் கட்டணத்தை ரத்து செய்... என கோஷமிட்டனர்.

 

இதேபோல் தமிழகம் முழுக்க அந்தந்த மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் தங்களது வீடுகள் முன்பு நின்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.