Skip to main content

முன்னேறியவர்களில் எந்த ஏழை 100 நாள் திட்டத்தில் வேலை செய்கிறார்? மு.தமிமுன்அன்சாரி கேள்வி!

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

 

முன்னேறிய சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, தமிழகத்தின் நிலைபாட்டை அறிய தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது.
 

இந்தக் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசியதாவது,
 

இது நாடே திரும்பி பார்க்கும் வகையில் முடிவெடுப்பதற்காக கூடியுள்ள கூட்டமாகும். சுதந்திரப் போராட்டமாக இருந்தாலும், இட ஒதுக்கீட்டு போராட்டமாக இருந்தாலும் தமிழ்நாடு தான் இந்தியாவுக்கே வழிகாட்டியுள்ளது.
தென்னிந்திய நல உரிமை சங்கம் தொடங்கி பெரியார், அண்ணா , காமராஜர், அம்மா, கலைஞர் ஆகியோர் கட்டிக்காத்த வழியில், இவ்விஷயத்தில்  நாம் முடிவெடுக்க வேண்டும்.

 

Thamimun Ansari


 

எந்த சமூகத்தில் ஏழைகள் இருந்தாலும், அவர்கள் இரக்கத்திற்குரியவர்கள். அவர்கள் முன்னேற்றப் பட வேண்டும். ஆனால் அதற்கான அளவுகோல் என்ன? கிராமத்தில் தினமும் 27 ரூபாய் சம்பாதிப்பவனும், நகரத்தில் தினமும் 33 ரூபாய் சம்பாதிப்பவனும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர் என்பது அளவுகோலாக உள்ளது. இங்கே, வருடத்திற்கு 8 லட்சம் சம்பாதிக்க கூடிய, 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கக் கூடிய ஒருவரை, முன்னேறிய சமூகத்தில் ஏழை என்கிறார்கள். 
 

முன்னேறிய சமூகத்தில் உள்ள எந்த ஏழை 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்கிறார்? விவசாய கூலியாக, கட்டிட தொழிலாளியாக யார் இருக்கிறார்? சாலைப் பணியாளராக யாராவது இருக்கிறார்களா? பசித்தவனும், ஏப்பம் விடுபனும் ஒன்றா? இது சமூக நீதிக்கு எதிரான திட்டம். இதை ஏற்க கூடாது.
 

இன்று நாடெங்கிலும் ஜனநாயகமும், சமூகநீதியும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. தமிழ்நாடு தான், சமூக நீதியை காப்பாற்ற வேண்டும். இந்தியாவுக்கே வகுப்பெடுக்க வேண்டும். மருத்துவ கல்லூரியில் கூடுதல் இடங்கள் தருகிறோம் என மத்திய அரசு ஏமாற்ற பார்க்கிறது. அவர்கள் நமக்கு அல்வா கொடுக்கிறார்கள். (பலத்த சிரிப்பு ) அது அல்வா அல்ல. ஃபெவிகால் பசை. அதை அறியாமல் சாப்பிட்டால், நாக்கு, தாடை, உதடு எல்லாம் ஓட்டிக் கொள்ளும். பிறகு வாயே திறக்க முடியாது. சமூக நீதியை பேசவே  முடியாது.

 

எனவே இங்கு பேசிய பெரும்பான்மையான தலைவர்களின் கருத்துப் படி, இந்த ஆபத்தான இடஒதுக்கீடு திட்டத்தை அடியோடு எதிர்க்க வேண்டும். நிராகரிக்க வேண்டும். இதை இந்த அரசு செய்தால், வரலாறு உங்களுக்கு பாராட்டுகளை குவிக்கும். இந்த நல்ல கூட்டத்திற்கு முக்கிய கட்சிகளை அழைத்து கருத்து கேட்டமைக்கு, தமிழக அரசுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றிகளை கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். தமிமுன் அன்சாரியுடன் மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் தைமியாவும் பங்கேற்றார்.
 

 இக் கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, CPM, CPI, விசிக, நாம்தமிழர் கட்சி, மதிமுக, தேமுதிக, முஸ்லிம் லீக், தமாகா, பாமக, தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப் படை, புதிய தமிழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும், அவற்றுடன் திராவிடர் கழகமும் பங்கேற்றது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.