Skip to main content

மாவட்டத்தில் 8 தொகுதிகளில் திமுகவே போட்டியிடுகிறது.. கொண்டாட்டத்தில் திமுகவினர்..!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

DMK is contesting in 8 constituencies in the district .. DMK in celebration


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்தப்பணிகளை செய்துவருகின்றனர். 

 

கடந்த பல தேர்தல்களாகவே திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார், போளுர், கலசப்பாக்கம், செங்கம் தொகுதிகளைத் தன்னுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஒதுக்கிவந்தது திமுக. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது கலசப்பாக்கம், செய்யார் தொகுதிகள் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இதனால் அக்கட்சியினரிடையே கடுமையான அதிருப்தி நிலவிவந்தது. கடந்த 20 ஆண்டுகளாக திமுகவின் சின்னமான உதயசூரியனை இந்த தொகுதிகள் பார்க்கவில்லை என குறைப்பட்டுக்கொண்டனர்.

 

கடந்த சில ஆண்டுகளாகவே 2021 சட்டமன்றத் தேர்தலின்போது மாவட்டத்தில் உள்ள 8 தொகுதி முழுவதிலும் திமுகவினரே நிற்க, உதயசூரியன் உதிக்க தலைமையிடம் பேசுகிறேன் என உறுதியளித்து வந்தார் திருவண்ணாமலை தெற்கு மா.செவான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.

 

இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ., வி.சி.க., உட்பட கூட்டணிக் கட்சிகளுடனான கூட்டணி பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு போன்றவை முடிவுக்கு வந்துள்ளன. இதனைப் பார்த்து திருவண்ணாமலை மாவட்ட திமுக தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

நீண்ட வருடங்களுக்குப் பிறகு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் திமுகவே போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. நீண்ட வருடமாக உதயசூரியன் சின்னத்தைக் காணாத செய்யார், கலசப்பாக்கம் தொகுதி திமுகவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தத் தொகுதிகளில் திமுகவினர் பலரும் சீட் பெற விரும்பி மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அக்கட்சி நிர்வாகிகள், ‘யார் வேட்பாளர் என்றாலும் இந்த தொகுதிகளில் உடன்பிறப்புகள் தீவிரமாக உழைப்பார்கள்’ என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.