Skip to main content

திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் 

Published on 02/05/2020 | Edited on 02/05/2020
dindigul srinivasan - M. K. Stalin



தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் உடல் நலக்குறைவால் இன்று (02.05.2020) காலமானார். இந்த தகவலை சென்னையில் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றிருந்த அமைச்சர் சீனிவாசனுக்கு தெரியப்படுத்தப்பட்டது. செய்தியை அறிந்த அமைச்சர் அதிர்ச்சியடைந்ததுடன் சோகத்தில் மூழ்கினார். இந்த செய்தியை கேள்விப்பட்ட மற்ற அமைச்சர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். அதன்பின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடனடியாக கார் மூலம் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டார். 
 

திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், ''தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை துணைவியார் திருமதி. கண்ணாத்தாள் அவர்கள் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அம்மையாரின் மரணத்தால் துயருற்றிருக்கும் திரு. திண்டுக்கல் சீனிவாசன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என கூறியுள்ளார். 




 

சார்ந்த செய்திகள்