Skip to main content

ராகுல் பிரதமர் ஆவதையும், ஸ்டாலின் முதல்வர் ஆவதையும் யாரும் தடுக்க முடியாது... -நாராயணசாமி

Published on 24/01/2019 | Edited on 24/01/2019

 

திருச்சியில் நடைபெற்ற தேசம் காப்போம் மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி் பேசும்போது,

 
மோடி ஆட்சியில் தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கும் திட்டங்கள் நிறைவேற்றப் படுவதாக குற்றச்சாட்டு. மத ஒற்றுமையை குலைப்பது பாஜக கட்சி எனக் குறிப்பிட்டார். சமத்துவத்தை மோடியும் பாஜகவும் குலைப்பதாக கூறினார். நாட்டை பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்யவும் தயார் என நாராயணசாமி அறிவிப்பு. மோடி அரசின் கைப்பாவையாக அடிமை ஆட்சி , ஊழல் ஆட்சி நடப்பதாகவும் கூறினார். இந்த அரசு தூக்கி எறியப் பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மத்தியில் ராகுல் பிரதமராவதையும், தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராவதையும், பிரியங்கா காந்தியை யாராலும் தடுக்க முடியாது என ஆவேசமாகப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்