Skip to main content

''முறிஞ்சது முறிஞ்சதுதான்; புதிய கூட்டணி குறித்து இபிஎஸ் பரபரப்பு பேட்டி

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

The chief minister is telling lies" - Edappadi Palaniswami interview

 

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததாக அண்மையில் அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பாஜக தரப்பினை சேர்ந்த வி.பி.துரைசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஆகியோர், அதிமுக தலைவர்களுடன் பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூட்டணியை புதுப்பிப்பது குறித்து பேசி வருகிறோம் என தெரிவித்திருந்தனர்.

 

இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வு. அதனாலேயே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்துள்ளது. எங்களுடைய புதிய கூட்டணி குறித்து தகவல்களை விரைவில் நாங்கள் தெரிவிப்போம். அதிமுக தலைவர்களிடம் பாஜக தலைமையில் பேசி வருவதாக வி.பி.துரைசாமி சொன்ன கருத்திற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும். அது அவருடைய கருத்து. இரண்டு கோடி தொண்டர்களுடைய உணர்வுகள் தலைமை கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு கூட்டணி முறிவு அறிவிக்கப்பட்டு விட்டது. இதை வேண்டுமென்ற தினம் நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால் என்ன சொல்வது. எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதை அவரிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் கட்சியை பற்றிதான் நாங்கள் பேச முடியும்.

 

மக்களுடைய மனது எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. எங்களைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெறும். ஏன் என்று சொன்னால் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வாக்குகளை நீங்கள் ஒன்றாக சேர்த்து பார்த்தால் ஏழு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம். சேலத்தில் மட்டும் 2 லட்சத்து ஐயாயிரம் வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளோம். சிதம்பரத்தில் 324 வாக்குதான் குறைவு, ஈரோட்டில் 7800 வாக்குதான் குறைவு, நாமக்கல்லில் 15,400 வாக்குகள்தான் குறைவு. இந்த மூன்று தொகுதிகளில் கிட்டத்தட்ட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எங்களுடைய வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். இவை எளிதாக வெற்றி பெறக்கூடிய தொகுதிகள்.

 

கள்ளக்குறிச்சி 20,000 ஓட்டில், வேலூர் 27,000 ஓட்டில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். காஞ்சிபுரத்தில் 42,000, கடலூரில் 50,000 என  இப்படி பல நாடாளுமன்ற தொகுதிகளில் 50,000 வாக்குகளுக்கு குறைவாக கிட்டதட்ட 10 இடங்கள் இருக்கிறது. ஒரு லட்சத்திற்கும் கீழ ஏழு இடங்கள் இருக்கிறது. இந்தமுறை 40 இடங்களிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழகத்தில் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார், திமுகவின் தலைவராக தேர்தல் அறிக்கை வெளியிட்டார். சுமார் 520 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 10% அறிவிப்புகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால் பேட்டி கொடுக்கிற பொழுது 95 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பச்சை பொய் சொல்கிறார்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.