Skip to main content

அமித்ஷா உடன் எடுத்த போட்டோ... ஆட்டம் போட்ட பாஜகவின் முக்கிய புள்ளி...  பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

அமித்ஷாவோடு ஒரு போட்டோ எடுத்துவிட்டு கண்டபடி ஆட்டம் போட்ட கோடம்பாக்கம் ஸ்ரீயின் லீலைகள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

"அகில இந்திய இந்து மகா சபா' என்ற அமைப்பின் தலைவரான கோடம்பாக்கம் ஸ்ரீ மீது, அதே அமைப்பின் மகளிர் அணி மாநிலச் செயலாளரான நிரஞ்சனி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். ஸ்ரீ தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரின்பேரில் சென்னை கீழ்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் ஸ்ரீ தலைமறைவானார்.

 

bjp



அவர் தலைமறைவான நிலையில் அவருடைய கடந்தகால லீலைகள் ஒவ்வொன்றாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகண்டனாக இருந்த கோடம்பாக்கம் ஸ்ரீ, 1999-ல் நான்சி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். எனவே, தனது பெயரை பிலிப் ஸ்ரீகண்டன் என்று கிறிஸ்தவப் பெயராக மாற்றிக்கொண்டார்.

 

bjp



ஆனால், வட பழனி முருகன் கோவிலில் தனது மனைவி பெயர் நந்தினி என்றும் தன்னை இந்துவாகவும் பதிவு செய்துள்ளார். நான்ஸியுடன் கிறிஸ்தவராக வாழ்ந்த ஸ்ரீ, திடீரென இந்துத் தலைவராக உருவெடுத்தார். அவருடைய கெத்துக்காக கார் வாங்கிக் கொடுத்ததுடன், பாதுகாப்புக்கு போலீஸையும் கொடுத்து ஆயிரம் விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெக நாதன், நல்லதுரை ஆகியோர் உதவி செய்துள்ளனர்.

இந்தக் கெத்தைக் காட்டி, டெல்லி சென்று அமித்ஷா, நிதின்கட்கரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க.வின் முக்கிய புள்ளிகளுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த படங்களைக் காட்டி, கோயம்புத்தூரைச் சேர்ந்த கவுதமன் என்பவருக்கு கேஸ் ஏஜென்சி எடுத்துத் தருவதாக 20 லட்சம் ரூபாயை வாங்கி ஏமாற்றியிருக்கிறார்.

 

bjp



ஒருமுறை ஆந்திர அமைச்சரின் மனைவியும் மகனும் சேர்ந்து நிலம் பத்திரப்பதிவு செய்ய சென்றார்கள். அதையறிந்த ஸ்ரீ, தனது பாதுகாப்புக்கு இருந்த பி.எஸ்.ஓ. ஆட்களை அனுப்பி அவர்களை துப்பாக்கி முனையில் கடத்தியிருக்கிறார். ஆனால், பி.எஸ்.ஓ.க்களில் ஒருவர் கடத்தி வைத்திருந்த இடத்தை போலீஸாருக்கு அனுப்பினார். அதையடுத்து, 50 காவலர் கொண்ட படை அம்பத்தூர் விரைந்து கடத்தப்பட்டவர்களை மீட்டது. அந்த வழக்கு அண்ணாநகருக்கு மாற்றப்பட்டது. ஆனால், அமித்ஷா உடன் எடுத்த போட்டோவைக் காட்டி ஸ்ரீ தப்பியுள்ளார்.


இந்நிலையில் கொஞ்ச நாட்கள் கழித்து இலங்கை குண்டுவெடிப்பில் தேடப்பட்ட குற்றவாளியை பூந்தமல்லி போலீஸார் கைதுசெய்தனர். அவரும் சுரேஷ் என்பவரும் நண்பர்கள். சுரேஷ் மூலமாகத்தான் அந்த குற்றவாளி தமிழகத்தில் பல கடத்தல் மற்றும் போதை மருந்து வியாபாரத்தை நடத்தியிருக்கிறார். இலங்கையிலிருந்து கப்பல் மற்றும் விமானம் வழியாக பிரவுன் சுகர், கோக்கைன், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை அனுப்பியிருக்கிறார். அவற்றை ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரத்திலிருந்து சென்னை முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு வினியோகம் செய்திருக்கிறார். சிறிது காலம் சென்றவுடன் குன்றத்தூர், ஐயப்பன்தாங்கல் என வியாபாரம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த வர்த்தகத்துக்கு உதவியாக இருந்தவர் ஸ்ரீ. போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பை இவர்தான் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.


இந்தக் காலகட்டத்தில்தான், சுரேஷ் என்பவர் ஸ்ரீயை அமித்ஷாவுடன் நெருக்கமான தொடர்பு உடைய மிகப்பெரிய ஆளாக பில்டப் கொடுத்து, இலங்கை வாழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை பெற்றுத் தருவதாக கூறி அழைத்து வந்திருக்கிறார். இதற்காக கோடிக்கணக்கில் பணம் கைமாறியிருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்து மகா சபாவில் பணம் வாங்கிக்கொண்டு பதவி வழங்கியதாகவும், இப்போது அவருடைய அமைப்புக்குச் சொந்தமாக டெய்லர்ஸ் சாலையில் உள்ள கட்டிடம் காஞ்சிபுரம் ஏகாம்பரீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமானது என்றும், கோவில்களுக்குச் சொந்தமான பல இடங்களை இவர் மடக்கிப் போட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஸ்ரீயின் வங்கிக்கணக்கு, அவருடைய கூட்டாளிகளின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது. சுரேஷ் என்பவரை வைத்தே பாலியல் ரீதியாகவும் மிரட்டுகிறார் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக புகார் அளித்த நிரஞ்சனி, ஸ்ரீயைப் பற்றிய எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும் என்பதால் அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்கள். இரவுநேரத்தில் இவருடைய ஆட்கள் போன் செய்து ஆபாசமாக பேசுகிறார்கள். ஸ்ரீயை காப்பாற்றுவதே போலீஸ்தான். எனது உயிருக்கு ஆபத்து என்றால், ஸ்ரீதான் பொறுப்பு. அவர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் என்னால் வாழ முடியும். இல்லையேல் எனக்கு சாவு நிச்சயம்'' என்று அழுதார்.

"ஸ்ரீ மீது ஏற்கெனவே சூளை மேடு, மைலாப்பூர், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர் உள்ளிட்ட பல காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி, தலைமறைவாக இருந்தாலும், பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் உதவியோடு இதிலும் தப்பித்துவிடலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இதுவரை அவர்மீது நடவடிக்கை பாயாமல் இருப்பதே இந்த சந்தேகத்திற்கு காரணம்'' என்கிறார்கள். கிடைத்த விவரங்கள் குறித்து கோடம்பாக்கம் ஸ்ரீயின் கருத்தை அறிய அவருடைய எண்ணுக்கு தொடர்புகொண்டோம். ஆனால், போனை எடுக்கவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.