Skip to main content

அண்ணாமலைக்கு பணம் செலுத்தும் ஆருத்ரா; காயத்ரி ரகுராம் பரபரப்பு ட்வீட்

Published on 14/04/2023 | Edited on 14/04/2023

 

Arudra pays for Annamalai; Gayatri sensational tweet

 

அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு காயத்ரி ரகுராம் மரியாதை செலுத்தினார். 

 

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதிதாக எதையோ ஒன்றை பேசுவது போல் அண்ணாமலை பேசுகிறார். மக்களுக்கு எல்லாமே தெரிந்த ஒரு விஷயம். இவை அனைத்தும் நீதிமன்றங்களில் உள்ள விஷயம். குற்றச்சாட்டுகளை மட்டுமே எடுத்து வைப்பது சரியென்று படவில்லை. திமுக ஃபைல்ஸ் என்று போட்ட வீடியோவில் திமுகவின் குடும்ப உறுப்பினர்களின் படங்களை போடுவேன் எனக் கூறினார். எம்எல்ஏ, எம்பியாக பொறுப்பில் இல்லாதவர்களின் படங்களையும் போடுவது தவறாகப்படுகிறது.

 

பாஜகவிலிருந்து விலகியதிலிருந்து மிரட்டல் இருக்கத்தான் செய்கிறது. போன் செய்து மிரட்டுவார்கள். அதற்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நல்ல அரசாங்கமும் நல்ல காவல்துறையும் உள்ளது. இதுவரை பாதுகாப்பு அளித்து வருகிறது. அண்ணாமலை புதிதாக வந்தபொழுது கட்சிக்கான வளர்ச்சி என்று தான் நினைத்தோம். இப்போது வீழ்த்திக்கொண்டு செல்கிறார். கூடிய விரைவில் அவர் மேல் நடவடிக்கை எடுத்தால் கட்சிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் நல்லது” எனக் கூறினார்.

 

இந்நிலையில், அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அண்ணாமலை பார்த்து பொறாமைப்படப் போகிறீர்களா? அல்லது நடவடிக்கை எடுத்து நிரூபிக்கப் போகிறீர்களா? மீதி 1 லட்சம் கோடி எங்கே, 2.5 லட்சம் கோடி என்று திமுக அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டு சொன்னீர்கள். அதிமுக ஊழலையும் கொண்டு வருவேன் என்று சொன்னீர்கள். நீங்கள் ஒரு கோமாளியாக மாறியது எவ்வளவு சோகமான முடிவு. அரை குறை அறிவினால் அனைத்து செயல்களும் அரை குறை தான் போல.

 

விருகம்பாக்கத்தில் அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இல்லம் மிகவும் எளிமையானது. அவர் அமைச்சரான பிறகும் பாதுகாப்புக்காக வீட்டை மாற்றவில்லை. ஆனால் Z பிரிவு பாதுகாப்புக்காக உங்கள் 3.5 லட்சம் வாடகை வீட்டை மாற்றியுள்ளீர்கள் என்பது வெட்கக்கேடானது. (உதாரணமாக ஆருத்ரா நிறுவனம்) போன்ற நண்பர்கள் பணம் செலுத்துவதால், சொகுசு கடிகாரம் மற்றும் கடற்கரைக்கு அடுத்துள்ள சொகுசு வீடுகளை நீங்கள் விரும்புகிறீர்கள். நண்பர்கள் மூலம் மாதச்செலவு 8 லட்சம். இதற்கு உங்களிடம் பணம் இல்லையென்றால்? பிறகு எப்படி ரஃபேல் வாட்ச் வாங்க உங்களிடம் பணம் வந்தது? முதல் தலைமுறை அரசியல்வாதி ஏன் இவ்வளவு ஆடம்பரம்.. எப்படி காமராஜருடன் ஒப்பிடலாம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.