Skip to main content

டெல்லியில் அசத்திய மாணவர்கள்; ஆளுநர் தமிழிசை நேரில் வாழ்த்து

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Unreal students in Delhi; Greet Governor Tamilisai in person

 

புதுச்சேரியில் டில்லி குடியரசு தின விழாவில் பதக்கங்கள் பெற்ற தேசிய மாணவர் படை வீரர்களுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது.

 

ஜனவரி 26 டில்லியில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் மொத்தம் 17 என்.சி.சி மாணவர் படைகள் பங்கேற்றன. அதில், புதுச்சேரி-தமிழகம்-அந்தமான் நிக்கோபர் இயக்குநரகத்தை சேர்ந்த என்.சி.சி கடற்படை, விமானப்படை, தரைப்படை மாணவர்கள் பொதுத்திறமை, தனி நடனம், குழு நடனம், கலாச்சார போட்டிகள் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளனர். பதக்கங்கள் மற்றும் கோப்பைகளோடு புதுச்சேரி திரும்பிய புதுச்சேரி-தமிழ்நாடு-அந்தமான் இயக்குநரகத்தை சேர்ந்த தேசிய மாணவர் படை (என்.சி.சி) மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி-தமிழகம்-அந்தமான் இயக்குநரக துணை டைரக்டர் ஜெனரல் கமாண்டர் அடுல் குமார் ரஸ்தோகி, புதுச்சேரி குரூப் கமாண்டர் கர்னல் சோம்ராஜ் குலியா ஆகியோர் பங்கேற்றனர். குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்று பதக்கம் மற்றும் கோப்பைகளை வென்ற என்.சி.சி மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். தொடர்ந்து குழு படம் எடுத்துக் கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை பேசுகையில், "குடியரசு தின விழாவில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ள உங்கள் அனைவரையும் துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பெருமையான ஒன்று. உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சி உங்களுக்கு தன்னம்பிக்கையையும் கலை, கலாச்சாரத்தின் மீதான ஆர்வத்தையும் தந்திருக்கிறது. முன்பெல்லாம் ராணுவம், காவல்துறை, என்.சி.சி போன்ற துறைகளில் பெண்கள் பங்கேற்பதில் தயக்கம் இருந்தது. பாரதி சொன்னதைப் போல நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு மிடுக்காக பெண்கள் வரும்போது, உண்மையிலேயே ஒரு பெண்ணாக பெருமை அடைகிறேன். அதற்காக அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல இன்னும் பல துறைகளில் அவர்கள் முன்னுக்கு வருவதற்கான உற்சாகத்தையும் ஒத்துழைப்பையும் ஊக்கத்தையும் தர வேண்டும்"  என்று குறிப்பிட்டார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.