Skip to main content

அமித்ஷா தலைமையிலான பேரணி திடீர் ரத்து....

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
amit sha


ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோராம், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

இந்நிலையில், வருகின்ற 28ஆம் தேதி ம.பியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு நாளை போபாலில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அமித்ஷா வாக்குசேகரிக்க இருந்தார். பிரமாண்ட பேரணி ஒன்றையும் நாளை அவர் தலைமையில் நிகழ்த்த இருந்தது  ஆனால் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி உளவுத்துறை அறிக்கை அளித்தது. இதனையடுத்து இந்த பேரணியானது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்