Skip to main content

'சூப்பர் ஹீரோ போலீஸ்'- காவலரின் துணிவுக்கு குவியும் பாராட்டு 

Published on 05/04/2022 | Edited on 05/04/2022

 

'Superhero Police' - Cumulative praise for the policemen bravery

 

தீ விபத்தில் சிக்கிய குழந்தையைத் துணிச்சலுடன் காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

ராஜஸ்தானில் கராவ்லி பகுதியில் ஏற்பட்ட மத கலவரத்தில் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றது. அந்த கலவரத்தில் தீ வைக்கப்பட்டதில் வீடு ஒன்று பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் தீ வைக்கப்பட்ட வீட்டில் குழந்தை ஒன்று சிக்கிக்கொள்ள, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் நேத்ரேஷ் சர்மா மிகவும் துணிச்சலுடன் வீட்டிற்குள் புகுந்து கைக்குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் புகைப்படங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வெளியானது. ராஜஸ்தான் காவல்துறையும் இந்த தகவலை அவர்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இந்நிலையில் துணிச்சலுடன் செயல்பட்ட காவலர் நேத்ரேஷ் சர்மாவை 'சூப்பர் ஹீரோ போலீஸ்' என பல தரப்பிலிருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்