Skip to main content

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

Petition in the Supreme Court to cancel the NEET exam!

 

செப்டம்பர் 12ஆம் தேதி அன்று நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

 

அந்த மனுவில், "நீட் வினாத்தாளை பயிற்சி மையங்களில் முன்கூட்டியே வழங்கி முறைகேடு நடந்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு, தேர்வில் ஆள் மாறாட்டம் ஆகிய முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இந்த ஆண்டு நீட் தேர்வில் மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் மாநிலங்களில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன. எனவே, ஏற்கனவே நடந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கோரியுள்ளனர்.

 

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்