Skip to main content

அகமதாபாத் டிஜிபிக்கு கிடைத்த அரிய மரியாதை; வைரலாகும் வீடியோ

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

People who have given respect to DGP Ahmadil who has been transferred

 

ஆந்திரா மாநிலம் அமலாபுரத்தைச் சேர்ந்தவர் ரவிதேஜா. ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் குஜராத் மாநிலம் ஜூனாகட் பகுதியில் 2019 ஆம் ஆண்டு முதல் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார். அதற்கு முன், இவர் மங்களூரில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தார். மங்களூரில் வெற்றிகரமாகப் பணியாற்றிய பிறகு, அங்கிருந்து அகமதாபாத்தில் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், 3 ஆண்டுகளாக ஜூனாகட்டில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அவர், தற்போது காந்தி நகர் மாவட்ட காவல்துறைத் தலைவராக மாற்றப்பட்டார்.

 

இதனை அறிந்த ஜூனாகட் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால், இவரின் நேர்மை; அந்த பகுதியில் உள்ள குற்றங்களைக் குறைத்தது; பொது மக்களின் நண்பனாக போலீஸ் பணியை மாற்றியது உள்ளிட்ட  எஸ்.பி. ரவிதேஜாவின் பல்வேறு நடவடிக்கையால் ஜூனாகட் குற்றங்கள் இல்லாத மாவட்டமாக மாறியதாகக் கூறப்படுகிறது. மேலும், எஸ்.பி. ரவிதேஜா காவல்துறையில் ஆற்றிய சேவையைப் பாராட்டி அப்போதைய துணை முதல்வர் நவீன் படேல் கையால் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுள்ளார். காந்தி நகருக்கு இடம் மாற்றப்பட்ட எஸ்.பி. ரவிதேஜாவை ஜூனாகட் மக்கள் பூக்களைத் தூவி மரியாதை செலுத்தி வரும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

People who have given respect to DGP Ahmadil who has been transferred

 

அந்த வீடியோவில், ரவிதேஜா காந்தி நகருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதால், ஜூனாகட் மக்கள் அவரைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் அமர வைத்து எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து போலீசார் பாரம்பரிய முறைப்படி காரில் கயிற்றைக் கட்டி இழுத்து வந்தனர். அதன் பின்னர், எஸ்.பி அலுவலகத்திற்குள் சென்று வெளியே வந்த ரவிதேஜாவை காண ஏராளமான மக்கள் நீண்ட தூரமாக வரிசையில் திரண்டு நின்றனர். அதன் பின்னர் அனைத்து மக்களையும் சந்தித்து அவர்களிடம் கை குலுக்கி பேசினார்.

 

அதனையடுத்து, அவர் தனது காரில் ஏறினார். அவர் வந்த காரின் பின்னால் ஏராளமான போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. மேலும், அவர் செல்லும் வழியெல்லாம் மக்கள் திரண்டு நின்று பூ மழை தூவி வழியனுப்பி வைத்தனர். மக்களின் அன்பு மழையில் நனைந்த எஸ்.பி. ரவிதேஜா இருகரம் கூப்பி மிகவும் பணிவுடன் அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். இந்த வழியனுப்பும் விழா இணையதளத்தில் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.