Skip to main content

எனது எண்ணங்கள் தமிழக மக்களை சுற்றியே உள்ளது; அரசின் அறிவுரைகளை பின்பற்றுங்கள் - ராகுல் காந்தி வேண்டுகோள்!

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

rahul gandhi

 

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நேற்று (30/12/2021) மதியம் முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியது. இந்த கனமழையின் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

 

கடலில் இருக்கும் என கணிக்கப்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நிலப்பகுதிக்கு திடீரென நகர்ந்ததே அதிகனமழைக்கு காரணம் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இந்தநிலையில் ராகுல் காந்தி சென்னையில் மழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது எண்ணங்கள் தமிழக மக்களை சுற்றியே உள்ளது. கனமழையில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். அரசின் அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றுங்கள்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்