Skip to main content

பங்குச் சந்தையைத் தாக்கிய இந்தியா- சீனா எல்லைத் தகராறு! ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகம்!!

Published on 17/06/2020 | Edited on 17/06/2020

 

mumbai sensex, nifty india - china issues


பங்குச்சந்தை ஆய்வாளர்கள் கணித்தபடியே, செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) தேசிய பங்குச்சந்தையான நிப்டியில் வர்த்தகம் தொடங்கியபோது, 10,000 புள்ளிகளைக் கடந்தது. இதனால் முதலீட்டாளர்களிடையே புத்துணர்ச்சி ஏற்பட்டாலும், அந்த மகிழ்ச்சி அடுத்த மூன்று மணி நேரம் கூட தாக்குப்பிடிக்கவில்லை. எல்லையில் இந்தியா- சீனா ராணுவத்தினர் குவிப்பால் பதற்றம் ஏற்பட்டது. இது, இந்தியப் பங்குச்சந்தைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

 

அடுத்த இரண்டு மணி நேரத்தில் நிப்டி 9,728.50 புள்ளிகள் வரை சர்ரென்று சரிந்தது. இந்திய வீரர்கள் மூவர் மரணம் அடைந்த செய்தி வெளியானதால், முதலீட்டாளர்கள் லாப நோக்கில் தங்களிடம் இருந்த பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர். ஒருகட்டத்தில் வாங்குவோரைக் காட்டிலும் பங்குகளை விற்போர் மூன்று மடங்குக்கும் மேல் அதிகரித்தனர். 

 

எல்லை விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம் என்று சீனா கூறியதுடன், எல்லையில் இருந்து இரு நாட்டுப் படைகளும் திரும்ப அழைக்கப்பட்டன. இதனால் ஓரளவு பதற்றம் தணிந்தது. பின்னர் வர்த்தக நேரம் முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இருந்து நிப்டி இண்டெக்ஸ் மீண்டும் படிப்படியாக உயர்ந்தது. வர்த்தக நேர முடிவில், 9,914 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது, திங்கள் கிழமை வர்த்தகப் புள்ளிகளைக் காட்டிலும் 100.30 புள்ளிகள் உயர்வு ஆகும்.
 

mumbai sensex, nifty india - china issues


நிப்டியில் ஹெச்.டி.எப்.சி. வங்கிப் பங்குகள் நேற்று 4.14 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. ஹெச்.டி.எப்.சி. பங்குகள் 3.90 சதவீதம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிப் பங்குகள் 3.41 சதவீதம், ஜிண்டால் ஸ்டீல் 2.86 சதவீதம், ஹிண்டால்கோ பங்குகள் 2.78 சதவீதம் வரை விலை உயர்ந்தன. டாடா மோட்டார்ஸ் அதிகபட்சமாக 5.87 சதவீதம் வரை சரிந்தன. இன்பிராடெல், இண்டஸ் இந்த் வங்கி, டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி பங்குகளும் லேசான சரிவைச் சந்தித்தன. மொத்தத்தில் நேற்றைய வர்த்தகத்தில் 24 பங்குகள் ஏற்றத்திலும், 26 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகம் ஆயின. 

 

மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ், திங்களன்று 33,228 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்து இருந்தது. நேற்று (ஜூன் 16) சென்செக்ஸின் துவக்கமே 33,853 புள்ளிகளில் தொடங்கி, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை அளித்தது. இந்தியா- சீனா நாடுகளிடையேயான பதற்றம், சென்செக்ஸிலும் எதிரொலித்தது. 

 

ஒரு கட்டத்தில், 34,022 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ், பின்னர் மதியம் 1.15 மணியளவில் 32,953 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்தது. இறுதியில் 33,605.22 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது, முந்தைய வர்த்தக புள்ளிகளைவிட 376 புள்ளிகள் உயர்வு என்பதால், முதலீட்டாளர்களிடையே நேர்மறையான நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. சென்செக்ஸில் 15 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 15 நிறுவனப் பங்குகளின் மதிப்புகள் இறக்கத்திலும் வர்த்தகம் ஆயின. 

 

புதன்கிழமை வர்த்தகத்தில் கவனிக்க வேண்டியவை:

 

நிப்டி 9,728 புள்ளிகளாகச் சரிந்து, பின்னர் ஏற்றம் கண்டிருப்பது என்பது நிப்டியில் காளையின் ஆதிக்கம் தொடரும் என்பதையே காட்டுகிறது என்கிறார்கள், நிபுணர்கள். ஹெச்.டி.எப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தீபக் ஜசானி, நேற்றைய வர்த்தகத்தில் இண்டெக்ஸ் 9,720 புள்ளிகளாகச் சரிந்தாலும்கூட, கடைசி இரண்டு அமர்வுகளில் படிப்படியாக ஏற்றம் கண்டுள்ளது. இது, நிப்டி வலுவான நிலையில் இருப்பதைக் காட்டுகிறது என்கிறார்.

 

ரேலிகர் பங்குத்தரகு நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் அஜித் மிஸ்ரா, நிப்டி இண்டெக்ஸ் ஒரு கட்டத்தில், 10,050 புள்ளிகள் வரை உயர்ந்தது, பங்குகள் வரும் காலத்தில் ஆதாயம் தரும் என்ற நம்பிக்கை அளிக்கக் கூடியதாகும். அதேநேரம், உலக பங்குச்சந்தைகளின் கள நிலவரமும் இந்தியப் பங்குச்சந்தைகளில் அவ்வப்போது எதிரொலிக்கும்,'' என்றார். 
 

mumbai sensex, nifty india - china issues


கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் கட்ட அலையால், அமெரிக்க பங்குச்சந்தைகள் கடந்த சில நாள்களாக தொடர்ந்து சரிவு கண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கணிசமான ஏற்றம் கண்டது. ஜெனரிக் மருந்துகள் மூலம் கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்ற தகவல் பரவியதால், முதலீட்டாளர்களிடையே சந்தை மீது ஆர்வம் அதிகரித்ததால், முதலீடுகளைக் கொட்டினர். இதனால் அமெரிக்க பங்குச்சந்தைகள் 759.62 புள்ளிகள் வரை (2.95 சதவீதம்) உயர்ந்துள்ளது. அமெரிக்க சந்தைகள் ஏற்றம் பெற்றதன் எதிரொலியாக, ஐரோப்பிய பங்குச்சந்தைகளிலும் 2.7 சதவீதம் வரை முன்னேற்றம் ஏற்பட்டது. 

 

இந்தியா- சீனா எல்லை தகராறு, அமெரிக்க சந்தைகளில் நிலவும் ஏற்ற, இறக்கம் காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகளிலும் இம்மாதம் முழுவதும் நிலையற்ற தன்மை காணப்படும் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள். என்றாலும், குறிப்பிட்ட சில பங்குகளில் காளையின் ஆதிக்கம் தொடரும் என்றும் கணித்திருக்கிறார்கள். 


அதன்படி, பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், பாலாஜி அமின்ஸ், கிரி இண்டஸ்ட்ரீஸ், பாரத் டைனமிக்ஸ், லூமாக்ஸ் ஆட்டோ டெக்னாலஜிஸ், பாலாஜி டெலிபிலிம்,  நியூலேண்ட் லேபரட்டரீஸ், பேயர் கிராப்சயின்ஸ், சவுத் வெஸ்ட் பின்னாக்கிள், 3எம் இண்டியா ஆகிய பங்குகள் ஆதாயம் தரக்கூடியவை என்கிறார்கள்.


சரிவில் உள்ள பங்குகள்:


புதன்கிழமை வர்த்தகத்தின்போது, பின்வரும் பங்குகள் சரிவைச் சந்திக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அவை...

 

http://onelink.to/nknapp


டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், எல் அண்டு டி, டெக் மஹிந்திரா, கிளென்மார்க் பார்மா, டாடா ஸ்டீல் பிஎஸ்எல், நோசில் லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஜினியர்ஸ் இண்டியா, எஸ்ஜேவிஎன் லிமிடெட், கேஸ்ட்ரால் இண்டியா, டோரண்ட் பவர், சிட்டி யூனியன் வங்கி, ஹெச்டிஎப்சி ஏஎம்சி, ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஹிந்துஸ்தான் மோட்டார், டேக் சொல்யூஷன்ஸ், டிரெண்ட், எஸ்ஆர்எப், ஜேகே லட்சுமி சிமெண்ட், மிர்ஸா இண்டர்நேஷனல், டிசிஎம் ஸ்ரீராம், சுதர்சன் கெமிக்கல்ஸ் மற்றும் பால்மெர் லாரீ ஆகிய பங்குகள் சரிவைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.

mumbai sensex, nifty india - china issues


எந்தப் பங்குகளை வாங்கலாம்?:


காவேரி சீட், டாடா கம்யூனிகேஷன்ஸ், எம்.ஓ.ஐ.எல்., தானுகா அக்ரி மற்றும் ரேலீஸ் இண்டியாக ஆகிய பங்குகள், கடந்த 52 வார உச்ச நிலையை அடைந்துள்ளன. அதனால் இப்பங்குகள் அனைத்தும் மேலும் விலை உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் உள்ளதால், இன்றைய வர்த்தகத்திலும் இவற்றுக்குக் கணிசமான வரவேற்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதி எச்சரிக்கை.... சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Dada threat to Salman Khan

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.