Skip to main content

நேபாள மழைவெள்ளத்தில் தமிழர்கள் உட்பட 1200 மேற்பட்டோர் சிக்கி தவிப்பு !!

Published on 03/07/2018 | Edited on 03/07/2018

 

NEPAL

 

 

 

நேபாளம் சிமிகோட் பகுதியில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் யாத்திரை சென்ற 23 தமிழர்கள் உட்பட 1200 க்கு மேற்பட்டோர் சிக்கி தவித்து வருகின்றனர்.

 

நேபாளத்தில் தற்போது பெய்துவரும் கனமழையால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அபாயங்கள் ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில் மழை பொழிவு இல்லாத நேரத்தில் கைலாஷ் யாத்திரைக்கு சென்ற யாத்ரீகர்கள் இந்த பேரிடரில் சிக்கி அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் தங்களை ராணுவம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

NEPAL

 

நேபாளத்தில் மட்டும் சிமிக்கோட் பகுதியில் 525 பேரும். ஹில்ஸா பகுதியில் 550 பேரும் மேலும் திபத்தை ஒட்டிய பகுதியில் 500க்கு மேற்பட்டோரும் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களில் 23 பேர் தமிழர்கள். இந்நிலையில் இந்த இடரில் சிக்கி தவிக்கும் அனைவரையும் மீட்க்கும் பணியில் ராணுவம் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.  

சார்ந்த செய்திகள்

 

Next Story

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Chance of rain in 11 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கரூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று (04.07.2024) இரவு 08.30 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அதே சமயம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கரூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Chance of rain in 9 districts

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இன்று (01.07.2024) இரவு 10 மணிக்குள் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு எனக் கணிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.