Skip to main content

தேர்தல் நெருங்க நெருங்க விழிபிதுங்கும் மோடி!

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

எத்தனையோ திருகுதாளங்களைச் செய்தாலும் இந்திய அளவில் பாஜகவின் தோல்வியை மோடியால் மறைக்கவே முடியவில்லை. கருத்துக் கணிப்பு நிறுவனங்களே பாஜக வெற்றி என்று பொய்கூட சொல்ல முடியாமல் மேம்போக்காக மெத்துகின்றன. தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே இதுதான் நிலை என்றால், போகப்போக என்ன நடக்குமோ என்று தெரியாமல் மோடி கண்டபடி உளறத் தொடங்கிவிட்டார்.

 

modi at coimbatore

 

குஜராத்தில் ஹர்திக் படேலை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவே பயப்படுகிறார். நீதிமன்றங்கள் மூலமாக அவருக்கு கிடைத்த இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையைக் காரணமாகக் காட்டி தேர்தலில் நிற்கமுடியாமல் செய்வதில் பாஜக வெற்றிபெற்றுவிட்டது.

 

இந்நிலையில்தான் மோடியின் அராஜகப் போக்கை விமர்சனம் செய்து அத்வானி வெளியிட்ட அறிக்கை பாஜகவினர் மத்தியிலும், குஜராத் மக்கள் மத்தியிலும் எதிர்விளைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலேயே பாஜக பெரும்பான்மைக்கு திணறிய நிலையில், மக்களவைத் தேர்தலில் மேலும் சரிவைச் சந்திக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

 

ஆனால், குஜராத்தில் பாஜக 20 தொகுதிகளைப் பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிடப்படுகிறது. இத்தனைக்கும் பட்டேலுக்கு வைத்த சிலையில் விரிசல் விழுந்திருப்பதுடன், அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபடுவோருக்கு சம்பளம் கூட கொடுக்கவில்லை என்ற அதிருப்தி பெரிய அளவில் இருக்கிறது

 

எந்தப் பக்கம் போனாலும் கேட்டை போடுவதைப் போல, பாகிஸ்தான் விவகாரத்தை மட்டுமே பிடித்து தொங்கும் மோடியை, ராகுல் திருடன் என்றும், தன்னுடன் கடந்த ஐந்தாண்டு ஆட்சி தொடர்பாக விவாதிக்க பயந்து ஓடுகிறார் என்றும் ராகுல் அடிக்கிற கிண்டல் பொதுமக்கள் மத்தியில் நன்றாக எடுபடுகிறது. மோடிக்கு தன்னிச்சையாக விவாதிக்க தெரியாது என்றும், ராகுல் அளவுக்கு விவாதத் திறமையோ, கேள்விகளை எதிர்கொள்ளும் விவரமோ மோடிக்கு இல்லை என்று இளம் வாக்காளர்களே நம்பத் தொடங்கிவிட்டனர்.

 

எழுதிவைத்த, முன்பே தயாரிக்கப்பட்ட உரைகளை மட்டுமே ஏற்ற இறக்கத்தோடு மோடி மேடைகளில் பேசுகிறார் என்று மக்களுக்கே தெரிந்துவிட்டது. அதுமட்டுமின்றி, கடந்த ஐந்தாண்டுகளில் எதையெல்லாம் சாதனை என்று வாய் வித்தாரம் பேசி மோடி சமாளித்தாரோ, அதையெல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் பேசவே மறுக்கிறார். இதற்கு காரணம் எதுவுமே மக்களுக்கு பயனளிக்கவில்லை. அதுமட்டுமின்றி அவற்றால் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காததுடன், இருந்த வேலையையும் இழக்கும் நிலைதான் ஏற்பட்டிருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.

 

தென்மாநிலங்கள் 5ல் பாஜகவுக்கு 15 முதல் 20 இடங்கள் கிடைப்பதே பெரும்பாடு என்கிற உண்மையை மறைத்து மோடி வாய்ஜாலம் காட்டிக் கொண்டிருக்கிறார். எல்லா பொய் தோற்றத்தையும் உடைக்கும் வகையில், தேர்தலுக்கு பின்னர் சுயேச்சைகள், உதிரிக் கட்சிகள், எதிரிக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் தயாராக இருப்பதாக கோவை கூட்டத்தில் பேசியிருக்கிறார் மோடி.

 

அதாவது தனது கூட்டணிக்கே பெரும்பான்மை கிடைக்காது என்று மோடிக்கு உண்மை புரியத் தொடங்கியிருக்கிறது. இப்பவே இந்த நிலையென்றால், அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களில் நிலைமை மிக மோசமாகும் என்பதையே மோடியின் பதற்றம் தெளிவுபடுத்துகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.