Skip to main content

இன்ஸ்பெக்டரைக் கொன்ற மாட்டுக் குண்டர்களுக்கு சிறை வாசலில் அமோக வரவேற்பு! 

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

பாஜக ஆட்சியில் இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் நடக்குமோ என்று உத்தரப்பிரதேச மக்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள்.
 

cow

 

 

கடந்த ஆண்டு, உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் இஸ்லாமிய மாநாடு ஒன்றை சீர்குலைப்பதற்காக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த விஎச்பியும், பஜ்ரங் தளமும் திட்டமிட்டன.
 

அதாவது, அந்த மாநாட்டில் பங்கேற்போர் உணவுக்காக மாடுகள் கொல்லப்படுவதாக புகார் கூறினார்கள். விசாரணையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சியானா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங்கும், உள்ளூர் இளைஞர் சுமித் குமார் என்பவரும் கண்டறிந்தனர்.
 

இதையடுத்து, அந்த இன்ஸ்பெக்டரை இந்து விரோதி என்று முத்திரை குத்திய விஎச்பி அமைப்பினர், ஒரு டிராக்டரில் மாட்டிறைச்சியை ஏற்றிவந்து போலிஸ் நிலையம் முன்பாக நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
 

இந்த விவகாரத்தில்தான் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங்கையும், சுமித் குமார் என்ற இளைஞரையும் மாட்டுக்குண்டர்கள் தீவைத்து கொன்றார்கள். இதுகுறித்து மாநில பாஜக அரசு எதுவுமே நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டு காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடையாளம் தெரிந்த 27 பேரும் அடையாளம் தெரியாத 60 பேரும் இந்த வன்செயலில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்டது.
 

ஆனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் ராணுவவீரர் உள்ளிட்ட 7 பேர் திடீரென்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட கடுமையான புகார்கள் இல்லை என்று போலீஸார் சமாதானம் கூறினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், சிறை வாசலில் இவர்களை வரவேற்க பாஜகவினர் திரண்டு வாழ்த்து முழக்கமிட்டார்கள். வந்தேமாதரம், பாரத் மாதாக்கீ ஜே போன்ற கோஷங்களை எழுப்பிய அவர்கள், 7 பேர் விடுதலைக்காக விருந்தும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடகா பாஜக ஆட்சியில் மாடுகள் படும்பாடு!

Published on 28/10/2019 | Edited on 28/10/2019

மாடுகளைக் காப்பாற்ற மனிதர்களை கொல்லவும் தயங்காத பசுக்குண்டர்கள் வாழும் நாட்டில், 230 மாடுகள் படுக்கவே முடியாத சகதியில் சரியான பராமரிப்பின்றி நின்றுகொண்டிருக்கும் கொடுமையை நம்பமுடிகிறதா? இறந்த மாடு ஒன்றை அப்புறப்படுத்தாமல் போட்டிருக்கிற கொடுமையும் அம்பலமாகி இருப்பது எங்கே தெரியுமா? பாஜக ஆட்சிசெய்யும் கர்நாடகா மாநிலத்தில்தான்.

 

karnataka sloppy cow shelter

 

 

கர்நாடகா மாநிலம் ஹஸன் மாவட்டத்தில் ராயசமுத்ரா என்ற ஊரில் நாட்டு மாடுகளை பாதுகாக்கும் சரணாலயம் இருக்கிறது. அம்ரித் மஹால் என்ற அந்த சரணாலயம் ஆயிரத்து 524 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது.

இந்த சரணாலயத்தை பல மாதங்களாக சுத்தம் செய்வதே இல்லை, சாணியும் மாட்டுமூத்திரமும் மட்டுமின்றி, சேறும் சகதியும் சேர்ந்து மாடுகள் படுக்கக்கூட முடியாத கொடுமை நிலவுகிறது என்கிறார் சன்னராயப்பட்டினா தாலுகாவைச் சேர்ந்த முற்போக்கு விவசாயி ஒருவர். சமீபத்திய மழை இந்த சரணாலயத்தின் நிலைமையை மிகவும் மோசமாக்கி இருக்கிறது.

கால்நடத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும்தான் இந்த சரணாலயத்தின் மோசமான நிலைமைக்கு காரணம் என்கிறார்கள் கிராமத்து மக்கள். மாடுகளின் நிலைமை குறித்து பொதுமக்கள் மூலம் செய்திகள் வெளியானவுடன் அதிகாரிகள் அங்கு விரைந்து மாடுகளை மீட்டிருக்கிறார்கள். 230 மாடுகளில் 226 மாடுகளை அந்த சரணாலயத்திலிருந்து பக்கத்து தாலுகாவில் உள்ள இன்னொரு சரணாலயத்திற்கு கொண்டு போக உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முதல்வர் எடியூரப்பா மன்னிப்பு கோரினாலும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

 

 

Next Story

மாடு கடத்தல்... துப்பாக்கிச் சூடு நடத்தி திருடர்களை பிடித்த போலீஸ்...

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

மாடுகளை கடத்திய மூன்றுபேர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

 

uttarpradesh cow thieves caught by police

 

 

நேற்று நள்ளிரவில், ஹப்பூர் மாவட்ட எல்லை அருகே சவ்னானா கிராமத்தில் இருந்து மாடுகள் கடத்தப்படுவது குறித்த ஜார்சா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஹப்பூர் மாவட்ட எல்லை அருகே சந்தேகத்திற்கிடமான பிக்-அப் வாகனம் ஒன்றை விசாரிப்பதற்காக போலீஸார் நிறுத்தியுள்ளனர். ஆனால் அதிலிருந்தவர்கள் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றனர். போலீஸாரும் இதற்கு பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் காயமடைந்த நிலையில், மேலும் மூன்று பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை துரத்திச் சென்ற போலீஸார் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது, ஒரு மாடு, ஒரு எருமை, மூன்று சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிமருந்துகள் ஆகியவை மீட்கப்பட்டதாகவும். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.