ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான பவுத்தராமம் குகைக் கோவிலுக்கு காதலர்களுடன் வந்த கல்லூரி மாணவிகள் 32 பேர்பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

20 வயதுடைய நான்கு இளைஞர்கள் செய்த இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சுறுத்தலையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

sexual abuse to 32 girls in  Andhra

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் பௌத்தராமம் என்ற குகைக் கோவிலின் ஒரு பகுதியில் சிறு சிறு குகைகள் இருக்கிறது. இப்பகுதிக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும். வார இறுதி நாட்களில் ஓரளவுக்கு கூட்டம் இருந்தாலும் இந்த பகுதியானது வனம் மற்றும் குகைகள் சார்ந்த பகுதியாக இருப்பதால் காதலர்கள் தனிமையில் சந்தித்து இடையூறுகளின்றி பேசுவதற்கான இடமாக மாறியது. இதனால் காதலர்கள் முற்றுகையிடும் இடமாக இந்த பவுத்தராமம் குகை இருந்து வந்தது.

sexual abuse to 32 girls in  Andhra

இந்த நிலையில் கடந்த 24ம் தேதி தனது காதலியுடன் இந்த குகை பகுதிக்கு சென்ற நவீன் என்ற இளைஞர் ஒருவர் காதலியுடன் அமர்ந்து தனிமையில் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று நவீனை தாக்கிவிட்டு அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்று விட்டு சென்றது.

Advertisment

sexual abuse to 32 girls in  Andhra

sexual abuse to 32 girls in  Andhra

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் போக, சம்பவ இடத்தில் எழுந்து நடக்ககூட முடியாமல் அடிபட்டு கிடந்த நவீனை மீட்ட போலீசார் இறந்த மாணவியின் சடலத்தையும் மீட்டனர். இந்த கொடூர சம்பவம் குறித்து விசாரித்த கோதாவரி மாவட்ட காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. இந்த வழக்கில் பொட்டிராஜுலு என்ற 20 வயது போதை ஆசாமியை போலீசார் முதன் முதலில் விசாரித்த பொழுது சம்பவத்தன்று குகைக் கோவிலுக்கு காதல் ஜோடி தனியாக செல்வதை நோட்டமிட்ட அவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து சென்று உள்ளனர். அந்த மாணவியிடம் மெய்மறந்து பேசிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென புகுந்த அந்த கும்பல் நவீனை பலமாக தாக்கிவிட்டு அந்த மாணவியும் தலையில் தாக்கி மயக்கமடையச் செய்து உள்ளனர்.கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பின்னர் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

police

police

பொட்டி ராஜுலு கொடுத்த தகவலின் அடிப்படையில் 20 வயது உடைய சோமையா, கங்கையா, நாகராஜா ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்த பொழுது இந்த ஒரு மாணவி மட்டும் அல்ல ஒரு வருடத்தில் இதுவரை 32 இளம் பெண்களை இது போன்று குகைக்குள் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக் கொண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதில் ஒரு மாணவி, இரு இளைஞர்கள் என மூன்று பேரை அடித்துக் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. ஆனால் இதுவரை 7 பேர் மட்டுமே இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்த திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.