Skip to main content

கேரள தங்க கடத்தல் விவகாரம்... ஸ்வப்னா நீதிமன்றத்தில் ஆஜர் 

Published on 12/07/2020 | Edited on 12/07/2020
 Kerala gold issue ... Swapna in court

 

கேரளாவையே உலுக்கிய தங்க கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ்  தமிழகம் வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், நேற்று  பெங்களூரில் கைது செய்யப்பட்டார். என்.ஐ.ஏ போலீசார் அவரை கைது செய்த நிலையில் இன்று கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோர் நீதிமன்றத்தில் தற்போது ஆஜர்படுத்தப்பட்டனர். பெங்களூரில் கைது செய்த இருவரையும் கொச்சி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக இருவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆஜர் படுத்தப்பட்ட  ஸ்வப்னா, சந்தீப் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்