Skip to main content

காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி; புஷ்பா பட ஸ்டைலில் கொண்டாட்டம்

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

JigneshMevani for winning the Vadgam assembly constituency of Gujarat

 

குஜராத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. அதேபோல் இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் துவங்கி நடைபெற்று வருகிறது.  காங்கிரஸ், பாஜக என இருந்த குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் களம் ஆம் ஆத்மியின் வருகையில் மும்முனைப் போட்டியாக மாறியது. 

 

குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். காலை முதல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்த பாஜக தற்போதைய நிலவரப்படி 156 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ்  17 தொகுதிகளிலும்,  ஆம் ஆத்மி 5, மற்றவை 4 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.  இதன் மூலம் அறுதிப் பெரும்பான்மையாக இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 7 வது முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. 

 

இந்நிலையில் குஜராத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தில் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து இளம் தலைவராக உருவெடுத்து இருக்கும் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உனாவில் நடந்த படுகொலைக்கு எதிராக 2000க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களை ஒன்றாகத் திரட்டி பேரணி நடத்தி காட்டினார். தொடர்ந்து குஜராத்தில் நடந்த பல சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த ஜிக்னேஷ் மேவானி கடந்த 2017 ஆம் ஆண்டு நடைப்பெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வட்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு பாஜக வேட்பாளரை தனியாளாக தோற்கடித்து வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் வட்கம்  தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இதனைத் தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த ஜிக்னேஷ் மேவானி கடந்த வருடம் காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார். 

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் வட்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை தோற்கடித்து மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து இதனை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது ஜிக்னேஷ் மேவானி புஷ்பா பட ஸ்டையில் தனது வெற்றியை கொண்டாடியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.